காரில் ரகசியமாக நடந்த திருமணம்..அந்த வீடியோவை வெளியிடுவேன்.. மிரட்டிய சீமான்.. உண்மையை உடைத்த நடிகை!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் அவரால் ஏழுமுறை கருக்கலைப்புக்கு ஆளானதாகவும், நிர்வாண வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் நடிகை விஜயலட்சுமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், சீமான் கூட நான் வாழ்த்துக்கள் படத்தில் நடித்தேன். அந்த படத்தின் மூலமா தான் சீமான் எனக்கு பழக்கமானார். ஆரம்பத்தில் இருந்த எனக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. எனக்கு எப்போதுமே கடவுள் முருகன் மீது, ஈடுபாடு உண்டு. இதனால் எப்போது படப்பிடிப்பு நடந்தாலும் நான் முருகரை ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்துவிட்டு வருவேன். ஆனால், சீமான் அவர்கள் என்னிடம் பேசிய போதே உங்களை நான் கோவிலுக்கு போகவிட மாட்டேன் என்று தான் சொன்னார். முருகரை பிறகு தரிசனம் செய்து கொள்ளலாம், முதலில் படப்பிடிப்பில் இருக்கிறவர்களுடன் நன்றாக பழகி பேசுங்கள் என்று சொன்னார். அப்பொழுதே எனக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது. இதனால் நான் எப்போதுமே அவர் இருந்தால் நான் படப்பிடிப்பு தளத்தில் இருக்க மாட்டேன் என்றும் சொல்லி இருக்கிறேன்.

seeman vijayalakshmi

பழக்கம் ஏற்பட்டது: அந்த நேரத்தில் தான் என்னுடைய அக்கா குடும்பத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. என்னுடைய அக்காவின் கணவர் அவரை அடித்து துன்புறுத்தி பலவிதமான பிரச்சனைகள் கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் தான், நான் சீமானின் உதவியை நாடி சென்றேன். அப்போது, அவர் எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார். என் அம்மா இலங்கை தமிழர் என்பதால் சீமானை எங்க அம்மாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. இருவரும் மிகவும் அன்பாக பழகி வந்தார்கள், அந்த நேரத்தில் தான் எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

காரில் திருமணம்: இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக, சீமானை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். அப்போது சிறையில் இருந்து பலமுறை என்னிடம் அவர் பேசி இருக்கிறார். அதன் பிறகு மதுரையிலேயே அவர் தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக அங்கேயே தங்கியிருந்தார். அப்போது, நானும் அவருடன் தங்கி இருந்தேன். யார் வந்தாலும் என்னை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார். பலருக்கும் நான் வீட்டில் இருப்பதே தெரியாது அந்த நேரத்தில் தான் சேரன் அவர்கள், இப்படி இருப்பது சரி இல்லை. திருமணம் செய்து கொண்டால் தான் நன்றாக இருக்கும். இல்லை என்றால் தவறாகிவிடும் என்று சொன்னார்.

seeman vijayalakshmi

போட்டோவை தரவில்லை: அதன் பிறகு தான் நான், அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினேன். அவர் கிறிஸ்டியன் என்பதால் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வதற்கு தயங்கினார். பிறகு கோவிலுக்குள் கூட அவர் வரவில்லை, காரில் இருந்தபடியே எனக்கும் அவருக்கும் மாலை மாற்றி திருமணம் நடந்தது அப்போது எடுத்த போட்டோக்களை கூட அவரை வைத்துக் கொண்டார் என்னிடம் அந்த போட்டோக்களை கூட அவர் தரவில்லை. அப்போதே அந்த போட்டோவை வாங்கி நான் சேரனிடம் அனுப்பி இருந்தால், இன்று சேரன் எனக்காக பேசி இருப்பார். அதை நான் செய்யாமல் விட்டுவிட்டதால், இன்று இப்படி ஏமாந்து போய் இருக்கிறேன்.

தேன்மொழியுடன் நிச்சயம்: இந்த நேரத்தில் தான் தேன்மொழி இடமிருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது, அந்த தேன்மொழி யார் என்று விசாரிக்கும் போது தான் தேன்மொழிக்கும் சீமான் அவர்களுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தமான விஷயம் எனக்கு தெரிந்தது. இது குறித்து நான் சீமானிடம் கேட்ட பிறகு தான் எனக்கும் அவருக்குமே பிரிவு ஏற்பட்டது. அந்த தேன்மொழி என்ற பெண்ணும், நிறைய பணம் நகைகளை கொடுத்து ஏமாந்து இருக்கிறார். இந்த விஷயம் எனக்கு தெரிந்து கேட்ட போது, அது தேவை இல்லாத கதை அதை பற்றி எதுவும் கேட்காதே என்று சொல்லிவிட்டார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அப்போது, தான் சீமானின் ஆட்கள் சிலர் எனக்கு போன் செய்து இங்கே இருக்காதீர்கள், பெங்களூருக்கு சென்று விடுங்கள், அண்ணனின் வாழ்க்கை மாறப்போகுது. இனிமே, நீங்கள் இங்கே இருந்தீர்கள் என்றால் நன்றாக இருக்காது என்று மிரட்டினார்கள். அதன் பிறகு தான், நான் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் கொடுத்தேன்.

seeman vijayalakshmi

மாறிவிட்டார்: நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த போது கூட அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் புகார் கொடுத்தேன். ஆனால், நான் பணம் வாங்கிக் கொண்டதாக சொல்கிறார்கள். நான் எப்போதும், பணம் கேட்டது இல்லை. அப்போதிலிருந்து இப்போது வரை, அவர் ஏன் என்னை விட்டு சென்றார் என்று எனக்கு தெரியவே இல்லை. எப்போதும் கூட அவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாகவே இருக்கிறது. ஆனால், அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. என் அம்மா கூட இறக்கும் நேரத்தில் இன்னொரு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழு என்று சொன்னார்கள். ஆனால், என்னால் சீமானை என்றுமே மறக்கவே முடியாது. ஏனென்றால் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தோம். அன்று என்னுடன் வாழ்ந்த சீமான். எப்போதும் இல்லை, அவர் பணம், புகழ் எல்லாம் வந்துவிட்டதால், அவர் மொத்தமாக மாறி இருக்கிறார்.

நிர்வான வீடியோ: அந்த புகாருக்கு பிறகாவது என்னை அவர், திருமணம் செய்து கொள்வார் என்று உறுதி அளித்ததால் நான் அந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டேன். ஆனாலும், என்னை திருமணம் செய்து கொள்ளாமல் புறக்கணித்தார். பல இடங்களில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வந்தன. அதாவது என் நிர்வாண வீடியோவை வெளியிடுவோம் என்றும் பலவிதமான மிரட்டல்கள் வந்தன. இதனால், தான் நான் என்ன செய்வது என்று பயந்துவிட்டேன். அதன் பிறகு தான் துணிந்து முடிவு எடுத்து 14 வருடமாக போராடிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு என் கணவர் வேண்டும் அவருடன் நான் சேர்ந்து வாழ வேண்டும், சீமானின் மனைவி நான் தான் என்று அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் போராடினேன்.

seeman vijayalakshmi

கண்ணீர் பேட்டி: ஆனால், இன்று அவர் என்னை ஒரு பாலியல் தொழிலாளி என்று பேசியிருக்கிறார். பாலியல் தொழிலாளியாக இருந்தால், அந்த வேலையை தான் நான் பார்த்துக் கொண்டு சென்று இருப்பேன். சீமான் தான் வேண்டும் என்று இவ்வளவு தூரம் நான் போராடிக் கொண்டு இருக்க மாட்டேன். இனிமேலும் சீமான் தான் வேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தால், அதில் அர்த்தமே இருக்காது. இந்த அளவுக்கு அவர் பேசிய பிறகும் மனதில் ஒரு வெறுப்பு தான் வந்து இருக்கிறது. தற்போது சீமான் பேசுவதெல்லாம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டு இருக்கிறார். என்னையும் அவரும் பற்றி விஷயம் தெரிந்த பலரும் சீமானை காப்பாற்ற வேண்டும் என்று தான் பார்க்கிறார்கள் என்று நடிகை அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X