Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர்கள் பணக்காரர்கள் அல்ல… அவர்களுக்கும் தேவைகள் இருக்கும்… வினோதினியின் சுவாரசியமான பேட்டி !
சென்னை : நாடகம், நடிப்பு, நகைச்சுவை என அனைத்திலும் தனக்கென தனி பாதையை வகுத்துக்கொண்டு மின்னி வருகிறார் நடிகை வினோதினி.
நடிப்பு மட்டுமல்லாமல் திரைக்கதை எழுதுவதிலும் திறமை மிக்கவராக இருக்கிறார்.
அவரை பற்றி அறியாத பல சுவாரசியமான தகவல்களை இந்த நேர்காணலில் பார்க்கலாம்.
கேள்வி : ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாவது குறித்து நீங்கள் நினைப்பது என்ன?
பதில் : இதைத்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமல் சொன்னார். அவர் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் கூறினார். அதை நாம் யாரும் கருத்தில் கொள்ளவில்லை, அவர் மீது பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. ஆனால், இன்று ஓடிடியில்தான் பல படங்கள் வெளியாகின்றன. நான் சினிமாத்துறையில் இருக்கும் நபராக இருப்பதால், இது ஒரு ஆரோக்கியமான விஷயம் அல்ல, திரையரங்குகள் வளர வேண்டும் நாங்களும் வாழவேண்டும் என்றால் திரையரங்கில் தான் படங்கள் வெளியாக வேண்டும்.
Exclusive : அர்ப்பணிப்பான நடிப்பு... மனம் திறந்து பாராட்டிய விக்ரம்… நெகிழ்ந்த வினோதினி!
கேள்வி : திரைப்படத்தை இயக்கும், தயாரிக்கும் திட்டம் உள்ளதா?
பதில் : படத்தை தயாரிக்கும் அளவுக்கு என்னிடம் பணமில்லை, மேலும், பணமிருந்தாலும் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் எனக்கு ஆர்வம் இல்லை.
கேள்வி : திரைத்துறையில் நுழையும் இளம்நடிகர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அட்வைஸ்?
பதில் : இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் சாதிக்க முடியும், அதற்கான தளங்களும் அதிகரித்துள்ளன. இதனால், சோர்ந்து போகாமல் அனைவரும் முயற்சி செய்யுங்கள் , கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள் இதுதான் என் பார்வை என்றார் வினோதினி.
கேள்வி : நடிகர் சங்கம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு கலைஞர்களுக்கும் எந்த மாதிரியான உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
பதில் : பெரிய உதவிகள் செய்வதை விட, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை பாக்கி வைக்காமல் கொடுத்தாலே போதும். இந்த நேரத்தில் இது பேருதவியாக இருக்கும். நடிகர்கள் என்றாலே பணக்காரர்கள், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற பார்வை உள்ளது. உண்மையில் அப்படி இல்லை, அவர்களுக்கும் தேவைகள் இருக்கும் அந்த தேவையை உணர்ந்து உழைச்ச பணத்தை அவர்களுக்கு கொடுங்கள்.
கேள்வி : நீங்கள் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறீர்களா?
பதில் : நிச்சயமாக கதையை தேர்வு செய்துதான் நடிப்பேன், குறைந்ததது என்னுடைய கதாபாத்திரம் குறித்தாவது கேட்டுக்கொள்வேன் என்றார்.