Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நடிகர்கள் பணக்காரர்கள் அல்ல… அவர்களுக்கும் தேவைகள் இருக்கும்… வினோதினியின் சுவாரசியமான பேட்டி !
சென்னை : நாடகம், நடிப்பு, நகைச்சுவை என அனைத்திலும் தனக்கென தனி பாதையை வகுத்துக்கொண்டு மின்னி வருகிறார் நடிகை வினோதினி.
நடிப்பு மட்டுமல்லாமல் திரைக்கதை எழுதுவதிலும் திறமை மிக்கவராக இருக்கிறார்.
அவரை பற்றி அறியாத பல சுவாரசியமான தகவல்களை இந்த நேர்காணலில் பார்க்கலாம்.
கேள்வி : ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாவது குறித்து நீங்கள் நினைப்பது என்ன?
பதில் : இதைத்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமல் சொன்னார். அவர் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் கூறினார். அதை நாம் யாரும் கருத்தில் கொள்ளவில்லை, அவர் மீது பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. ஆனால், இன்று ஓடிடியில்தான் பல படங்கள் வெளியாகின்றன. நான் சினிமாத்துறையில் இருக்கும் நபராக இருப்பதால், இது ஒரு ஆரோக்கியமான விஷயம் அல்ல, திரையரங்குகள் வளர வேண்டும் நாங்களும் வாழவேண்டும் என்றால் திரையரங்கில் தான் படங்கள் வெளியாக வேண்டும்.
Exclusive : அர்ப்பணிப்பான நடிப்பு... மனம் திறந்து பாராட்டிய விக்ரம்… நெகிழ்ந்த வினோதினி!
கேள்வி : திரைப்படத்தை இயக்கும், தயாரிக்கும் திட்டம் உள்ளதா?
பதில் : படத்தை தயாரிக்கும் அளவுக்கு என்னிடம் பணமில்லை, மேலும், பணமிருந்தாலும் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் எனக்கு ஆர்வம் இல்லை.
கேள்வி : திரைத்துறையில் நுழையும் இளம்நடிகர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அட்வைஸ்?
பதில் : இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் சாதிக்க முடியும், அதற்கான தளங்களும் அதிகரித்துள்ளன. இதனால், சோர்ந்து போகாமல் அனைவரும் முயற்சி செய்யுங்கள் , கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள் இதுதான் என் பார்வை என்றார் வினோதினி.
கேள்வி : நடிகர் சங்கம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு கலைஞர்களுக்கும் எந்த மாதிரியான உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
பதில் : பெரிய உதவிகள் செய்வதை விட, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை பாக்கி வைக்காமல் கொடுத்தாலே போதும். இந்த நேரத்தில் இது பேருதவியாக இருக்கும். நடிகர்கள் என்றாலே பணக்காரர்கள், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற பார்வை உள்ளது. உண்மையில் அப்படி இல்லை, அவர்களுக்கும் தேவைகள் இருக்கும் அந்த தேவையை உணர்ந்து உழைச்ச பணத்தை அவர்களுக்கு கொடுங்கள்.
கேள்வி : நீங்கள் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறீர்களா?
பதில் : நிச்சயமாக கதையை தேர்வு செய்துதான் நடிப்பேன், குறைந்ததது என்னுடைய கதாபாத்திரம் குறித்தாவது கேட்டுக்கொள்வேன் என்றார்.