Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காலைப் பனியில் அதிசயா!
வட்டாரம் செகண்ட் ஹீரோயின் அதிசயா கையில் இப்போது 3 படம் இருக்கிறதாம்.
தஞ்சாவூர் தந்த அழகு பொம்மைதான் இந்த அதிசயா. சுத்தத் தமிழச்சியான அதிசயா, அட்டகாசத் திறமைகள்நிறைய கொண்டவர். வட்டாரத்தில் 2வது நாயகியாக வந்து போனாலும், அவரைத் தேடி இப்போது 3 ஹீரோயின்வாய்ப்புகள் ஓடி வந்திருக்கிறதாம்.இதில் ஒரு படத்தை ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளார். படத்துக்கு காலைப் பனி என்று அருமையான பெயரைவைத்துள்ளனர், இதில் புதுமுகமான ஜே.ஜே. ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இதில் எனக்கு அருமையான கேரக்டர், காலைப் பனி பார்க்க எப்படி இருக்கும்? அது போலவே இப்படத்திலும்எனது கேரக்டர் படு ரம்யமாக இருக்கும் என்கிறார் அதிசயா.
இதுதவிர மேலும் 2 படங்களையும் பேசிக் கொண்டிருக்கிறார் அதி கூடிய விரைவில் இந்தப் படங்கள் குறித்தஅறிவிப்பும் வெளியாகுமாம்.
இந்த ஆண்டு எனது ஆண்டு, கலக்கப் போகிறேன் பாருங்க என்று ரவுண்டு கட்டி ரவுசு பண்ண காத்திருக்கும்அதிசயா படு ஆர்வமாக கூறுகிறார்.
அருமையான நடிப்பு பிளஸ் அளவான கிளாமர் என சூப்பர் ஃபார்முலாவுடன் களம் இறங்கியுள்ள அதிசயா,நானாக வாய்ப்புகளைத் தேடிப் போக மாட்டேன். என்னால் முடியும் என்று நம்பி என்னைத் தேடிவருகிறவர்களை கைவிடவும் மாட்டேன் என்று கமல் பாணியிலும் தத்துவமாக பேசி அசத்துகிறார்.
பொதுவாக 2வது நாயகியாக நடித்தால் தொடர்ந்து அதே போன்ற ரோல்களைத்தான் கொடுப்பார்கள்கோலிவுட்டார். ஆனால் அதிசயா விஷயத்தில் அது மாறியிருக்கிறது.
அவரால் தனித் தவில் வாசிக்க முடியும் என்று புரிந்துதான் நிறையப் பேர் அதிசயாவை தனி ஆவர்த்தனத்திற்குஅழைக்க ஆரம்பித்துள்ளனராம். சொல்லிச் சொல்லி சந்தோஷப்படுகிறார் அதிசயா.
பின்னுங்க!