Don't Miss!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அஜீத் இல்லாமல் ஜெயித்துக் காட்டுவேன்-கெளதம் மேனன் சபதம்
விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு அஜீத்துடன் இணைவதாக இருந்தார் கெளதம். இப்படம் ஒரு துப்பறியும் கதை. படத்திற்கு துப்பறியும் ஆனந்த் எனவும் பெயர் சூட்டியிருந்தார். சமந்தா நாயகியாக நடிப்பார் எனவும் கூறப்பட்டது. இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் நீண்ட நாட்களாக அஜீத் ஸ்கிரிப்ட் குறித்து கேட்டும் அதை தயார் செய்யாமல் இழுத்தடித்து வந்தார் கெளதம் என்று தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அஜீத், கெளதம் வேண்டாம் எனக் கூறி விட்டார்.
இதையடுத்து தயாநிதியும், கெளதமை டிராப் செய்து விட்டு, வெங்கட் பிரபுவை புதிய இயக்குநராக்கி விட்டார். இப்போது மங்காத்தா என்ற பெயரில் இந்தப் படம் தொடங்கியுள்ளது.
அஜீத்தின் அதிரடியால் அப்செட்டாகிப் போன கெளதம் மேனன், அஜீத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அஜீத், கெளதம்மேனன் இல்லாமல் தானே 50 படங்களை முடித்தேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அஜீத் நடிப்பதாக இருந்த கதையை தூசி தட்டில் கையில் எடுத்துள்ளாராம் கெளதம். அதில் சில மாற்றங்களைச் செய்து, திரைக்கதையை விறுவிறுப்பாக்கி, இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்க சபதம் போட்டுள்ளாராம் கெளதம்.
இந்தி விண்ணைத் தாண்டி வருவாயாவை தற்போது ஆரம்பித்துள்ள கெளதம் மேனன் அதை முடித்த பின்னர் துப்பறியும் கதைக்குப் போகவுள்ளாராம்.