விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில நான் தான் அமெரிக்க மாப்பிள்ளை.. நடிகர் பெனிடோ ஜாலி பேட்டி!
சென்னை: சாக்லேட் பாய் கதாபாத்திரம் முதல் சாய் பாபா கதாபாத்திரம் வரை ஏகப்பட்ட வேடங்களில் நடித்து கலக்கி உள்ள நடிகர் பெனிடோவின் பிரத்யேக பேட்டி வெளியாகி உள்ளது.
Recommended Video
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடிகை திரிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் நபராக அந்த சர்ச் காட்சியில் இவர் தான் நடித்திருப்பார்.

விளம்பர படங்களில் நடித்து வந்த இவரை, சும்மா வாங்க பார்க்கலாம் என கூப்பிட்ட இயக்குநர் கெளதம் மேனன், வந்த நொடியிலேயே, நடிகை திரிஷாவுடன் புரொபஸ் பண்ணும் காட்சியை கொடுத்து நடிக்க வைத்து விட்டாராம்.
அவ்ளோ பெரிய ஸ்டாருடன் திடீரென எப்படி நடிப்பது என நெர்வஸ் ஆன இவரை கூல் பண்ணி நடிக்க வைத்துள்ளார் கெளதம் மேனன்.
கேரளாவில் திரிஷாவுக்கு இவருடன் நடக்க விருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் சிம்பு உள்ளே புகுந்து களைத்து விடுவதை ரசிகர்கள் ஏகப்பட்ட தடவை பார்த்து ரசித்து பார்ப்பார்கள்.
அதுமட்டுமின்றி, கருணாநிதி கை வண்ணத்தில் உருவான தென் பாண்டிச்சிங்கம் சீரியலில் இவர் தான் லீடு ரோலில் நடித்துள்ளார்.
மேலும், நடிகை சனம் ஷெட்டி நாயகியாக நடித்த சவாரி படத்தில் இவர் தான் ஹீரோ. ஏகப்பட்ட படங்கள், வெப்சீரிஸ்கள் என நடித்து வரும் இவர், சாய் பாபா கதாபாத்திரம் ஏற்று மகான் வெப்சீரிஸில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் தனது லட்சியம் என்னவென்றும், இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்தும் நடிகர் பெனிடோ கலகலப்பாக பேசும் வீடியோவை பார்த்து ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











