விஜய் - சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கணும்! - அனன்யா
முதல் படமான நாடோடிகள் வெற்றிபெற்றபோது கூட அனன்யாவுக்கு இவ்வளவு வாய்ப்புகள் வந்ததில்லை.
எங்கேயும் எப்போதும் படம் அனன்யாவுக்கு புதிய உலகையே திறந்துவிட்டுள்ளது. நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.
ஆனால் மிக நிதானமாகவும், தேர்ந்தெடுத்தும் கதைகளை ஒப்புக் கொள்கிறாராம் அவர்.
தனது அடுத்த படங்கள், திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், "எங்கேயும் எப்போதும் படம் பெரிய ஹிட்டானது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற வாய்ப்புகள் அனைத்தையும் ஒப்புக் கொள்வதில்லை.
மலையாளத்தில் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். விஜய், அஜித், சூர்யா போன்றோருடன் நடிக்க ஆர்வம் உள்ளது. அவர்களின் படங்களுக்கு முன்னுரிமை தருவேன்," என்றார்.
ஓடு மீன் ஓட... என்பார்களே, அதானா இது!


Click it and Unblock the Notifications











