கலக்கல் திராட்சை அபர்ணா திராபையான நடிகைகளுக்கு மத்தியில், அத்தனை அம்சங்களும் அட்டகாசமாகஅமைந்த கருப்பு திராட்சையாக மிளிர்கிறார் அபர்ணா. நெஞ்சு நிறையசந்தோஷத்துடன் நெஞ்சில் ஜில் ஜில் படத்தில் நடித்து வரும் அபர்ணா மீண்டும் ஒருரவுண்டு வருவேன் என்று நம்பிக்கையாக உள்ளார்.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற உருப்படாத படத்தில் அறிமுகமானவர்தான் அபர்ணா. ஆனாலும் முதல் படத்திலேயே ரசிகர்களின் நெஞ்சைப் பிசைந்தவர்.கருப்பாக இருந்தாலும் எடுப்பாக இருந்ததால் அபர்ணாவின் அழகு இளசுகளுக்குஇம்சையைக் கொடுத்தது.துரதிர்ஷ்டவசமாக முதல்படம் போணி ஆகாததால் அபர்ணாவும் எடுபடவில்லை.ஆனால் அவரது எடுப்பான தோற்றம் மலையாள திரையுலகைக் கவர்ந்தது. இதனால்அங்கு 2 படங்களில் நடித்தார். தமிழில் சில பட வாய்ப்புகள் அவருக்கு வந்தன. ஆனாலும், படத்திற்கு பைனான்ஸ்செய்யுங்களேன் என்று அப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனத்தியதால் வேண்டவேவேண்டாம் இந்த பிசினஸ் என்று கூறி விட்டார். இடையில் ஏபிசிடி வெளியாகிஅபர்ணாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.இப்போது நெஞ்சில் ஜில் ஜில் என்ற குளுமையான படத்தில் நடித்து வருகிறார்அபர்ணா. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்குக்காக லண்டன் சென்று திரும்பியுள்ளஅப்புவை உட்கார வைத்து கதை கேட்டோம்.கிளாமர் பாதி, நடிப்பு பாதியா இனிமேல்? அப்படி பாலிசி எல்லாம் என்னிடம்கிடையாது. நல்லா நடிக்க வேண்டும், கிளாமர் தேவையான அளவு காட்டலாம்.அவ்வளவுதான். மற்றபடி இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று கோடு எல்லாம்போட்டுக் கொள்ள மாட்டேன் என்று ஆரம்பித்தார் அபர்ணா. சினிமாங்கறதே கிளாமரான ஒரு தொழில்தான். இங்கே எல்லாமே கவர்ச்சிதான்,பணம், புகழ் எல்லாமே கவர்ச்சிகரமான ஒரு விஷயம்தான் இங்கே. எனவேநடிப்பிலும் கிளாமராக இருப்பதைத் தவிர்க்க முடியாது.அதற்காக முழு நீள அளவில் கிளாமர் காட்ட முடியுமா? முடியாது, அப்படிப்பட்டபடங்களுக்கும், நடிகைகளுக்கும் வேறு மாதிரியான பெயர்! அப்படி எல்லாம் நான்நிச்சயம் நடிக்க மாட்டேன்.படத்திற்கு தேவை என்றால், கதைக்குத் தேவை என்றால் கிளாமர் காட்டுவதில் எந்த்ததவறும் இல்லை. அதற்கும் கூட எல்லை உண்டு. எல்லை மீறினால் எதுவுமே நன்றாகஇருக்காது.சர்க்கரை தித்திப்பாக இருப்பதால் அள்ளிப் போட்டுக் கொண்டு விட முடியாது,அதுமாதிரிதான் கிளாமரும்...சரி குத்துப் பாட்டுக்கு ஆடுவீங்களா என்று அப்பாவி போல கேட்க அபர்ணாவுக்குவெட்கம் வந்து விட்டது. அதெல்லாம் ஒரு டான்ஸா சார், ரொம்ப அசிங்கமாக சிலநடிகைகங்க ஆடுறாங்க. நான் தமிழ்ப் பொண்ணு, எனக்கு அப்படியெல்லாம் காலைத்தூக்கி ஆட முடியாது. ரொம்ப நாராசமா இருக்கு. எப்படித்தான் ஆடுறாங்களோ என்று அங்கலாய்த்தார். இப்படியெல்லாம் பேசும் அபர்ணா, நெஞ்சில் ஜில் ஜில் படத்தில் கிளாமரை அள்ளிஇறைத்திருக்கிறார்.இப்படம் எனக்கு மீண்டும் ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்தித் தரும். நானும் ஒருரவுண்டு வருவேன். எனக்கு என்ன இல்லை? என்று தன்னையே ஏற இறங்கப்பார்த்துக் கொண்டு கேட்கிறார்.என்னத்தச் சொல்ல, பெருச்சை அள்ளி போட்டவாறு இடத்தைக் காலி செய்தோம்!
திராபையான நடிகைகளுக்கு மத்தியில், அத்தனை அம்சங்களும் அட்டகாசமாகஅமைந்த கருப்பு திராட்சையாக மிளிர்கிறார் அபர்ணா. நெஞ்சு நிறையசந்தோஷத்துடன் நெஞ்சில் ஜில் ஜில் படத்தில் நடித்து வரும் அபர்ணா மீண்டும் ஒருரவுண்டு வருவேன் என்று நம்பிக்கையாக உள்ளார்.
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற உருப்படாத படத்தில் அறிமுகமானவர்தான் அபர்ணா. ஆனாலும் முதல் படத்திலேயே ரசிகர்களின் நெஞ்சைப் பிசைந்தவர்.
கருப்பாக இருந்தாலும் எடுப்பாக இருந்ததால் அபர்ணாவின் அழகு இளசுகளுக்குஇம்சையைக் கொடுத்தது.
துரதிர்ஷ்டவசமாக முதல்படம் போணி ஆகாததால் அபர்ணாவும் எடுபடவில்லை.ஆனால் அவரது எடுப்பான தோற்றம் மலையாள திரையுலகைக் கவர்ந்தது. இதனால்அங்கு 2 படங்களில் நடித்தார்.
தமிழில் சில பட வாய்ப்புகள் அவருக்கு வந்தன. ஆனாலும், படத்திற்கு பைனான்ஸ்செய்யுங்களேன் என்று அப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனத்தியதால் வேண்டவேவேண்டாம் இந்த பிசினஸ் என்று கூறி விட்டார். இடையில் ஏபிசிடி வெளியாகிஅபர்ணாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
இப்போது நெஞ்சில் ஜில் ஜில் என்ற குளுமையான படத்தில் நடித்து வருகிறார்அபர்ணா. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்குக்காக லண்டன் சென்று திரும்பியுள்ளஅப்புவை உட்கார வைத்து கதை கேட்டோம்.
கிளாமர் பாதி, நடிப்பு பாதியா இனிமேல்? அப்படி பாலிசி எல்லாம் என்னிடம்கிடையாது. நல்லா நடிக்க வேண்டும், கிளாமர் தேவையான அளவு காட்டலாம்.அவ்வளவுதான். மற்றபடி இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று கோடு எல்லாம்போட்டுக் கொள்ள மாட்டேன் என்று ஆரம்பித்தார் அபர்ணா.
சினிமாங்கறதே கிளாமரான ஒரு தொழில்தான். இங்கே எல்லாமே கவர்ச்சிதான்,பணம், புகழ் எல்லாமே கவர்ச்சிகரமான ஒரு விஷயம்தான் இங்கே. எனவேநடிப்பிலும் கிளாமராக இருப்பதைத் தவிர்க்க முடியாது.
அதற்காக முழு நீள அளவில் கிளாமர் காட்ட முடியுமா? முடியாது, அப்படிப்பட்டபடங்களுக்கும், நடிகைகளுக்கும் வேறு மாதிரியான பெயர்! அப்படி எல்லாம் நான்நிச்சயம் நடிக்க மாட்டேன்.
படத்திற்கு தேவை என்றால், கதைக்குத் தேவை என்றால் கிளாமர் காட்டுவதில் எந்த்ததவறும் இல்லை. அதற்கும் கூட எல்லை உண்டு. எல்லை மீறினால் எதுவுமே நன்றாகஇருக்காது.
சர்க்கரை தித்திப்பாக இருப்பதால் அள்ளிப் போட்டுக் கொண்டு விட முடியாது,அதுமாதிரிதான் கிளாமரும்...
சரி குத்துப் பாட்டுக்கு ஆடுவீங்களா என்று அப்பாவி போல கேட்க அபர்ணாவுக்குவெட்கம் வந்து விட்டது. அதெல்லாம் ஒரு டான்ஸா சார், ரொம்ப அசிங்கமாக சிலநடிகைகங்க ஆடுறாங்க. நான் தமிழ்ப் பொண்ணு, எனக்கு அப்படியெல்லாம் காலைத்தூக்கி ஆட முடியாது.
ரொம்ப நாராசமா இருக்கு. எப்படித்தான் ஆடுறாங்களோ என்று அங்கலாய்த்தார்.
இப்படியெல்லாம் பேசும் அபர்ணா, நெஞ்சில் ஜில் ஜில் படத்தில் கிளாமரை அள்ளிஇறைத்திருக்கிறார்.
இப்படம் எனக்கு மீண்டும் ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்தித் தரும். நானும் ஒருரவுண்டு வருவேன். எனக்கு என்ன இல்லை? என்று தன்னையே ஏற இறங்கப்பார்த்துக் கொண்டு கேட்கிறார்.
என்னத்தச் சொல்ல, பெருச்சை அள்ளி போட்டவாறு இடத்தைக் காலி செய்தோம்!


Click it and Unblock the Notifications











