Just In
- 8 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 9 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 10 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 11 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுவிட்சர்லாந்துக்கு சென்று ஒப்பாரி சொல்லிக் கொடுத்தேன்.. ’பாரம்’ ஜெயலக்ஷ்மி அம்மா பேட்டி!
சென்னை: தேசிய விருது வென்றுள்ள பாரம் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.
இந்நிலையில், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுகுமார் சண்முகம் மற்றும் ஜெயலக்ஷ்மி அம்மா தமிழ் பிலிம் பீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், பாரம் படம் குறித்த பல்வேறு விசயங்களை தெரிவித்துள்ளனர்.

வயதான பெற்றோர்களை பாரமாக நினைத்து பெற்ற பிள்ளைகளே கொலை செய்யும் நெஞ்சை உருக்கும் கதையை படமாக எடுத்து பலரது மனங்களில் பாரத்தை சுமத்தி தேசிய விருது வென்றுள்ள இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி, பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தை இயக்காமல், நடிப்பு பள்ளியில் தேர்ச்சி பெற்ற புது முகங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
கன்னட படம் ஒன்றுக்கு கேஸ்டிங் டைரக்டராக இருந்த சுகுமார் சண்முகம், இந்த படத்திற்கு முதலில் கேஸ்டிங் டைரக்டராக ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர், ஒரு கதாபாத்திரத்திற்கு, யாருமே செட் ஆகாத நிலையில், இயக்குநர் பிரியா, நீங்களே பண்ணிடுங்க சுகுமார் எனக் கூறியதும், அந்த முக்கியமான ரோலில் நடித்து அசத்தியுள்ளார் சுகுமாறன்.
விமர்சனம்: வயதான தாய் தந்தைக்கு இதுதான் கதியா? தாங்க முடியாத வலி சொல்லும் 'பாரம்'
மேலும், பாரம் படத்தில் நடித்த, அத்தனை கலைஞர்களையும், தேர்வு செய்து, நடிப்பு பயிற்சியும் இவர் கொடுத்துள்ளார்.
சுகுமாரை தொடர்ந்து, இந்த படத்தில் கொல்லப்படும் தாத்தாவின் தங்கையாக நடித்துள்ளார் ஒப்பாரி பாட்டு புகழ் ஜெயலக்ஷ்மி அம்மா.
சுவிட்சர்லாந்து வரை சென்று, ஒப்பாரி பாடலை பிரபலப்படுத்தியுள்ள இவர், பாரம் படத்தில், மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கண்ணீர் வரவைத்துள்ளார்.
மேலும், தமிழ் பிலிமி பீட் நேயர்களுக்காக நெஞ்சை உருக்கும் ஒப்பாரி பாடல் ஒன்றையும் வீடியோவில் பாடியுள்ளார்.
வெற்றிமாறன் பேனரில் நாளை வெளியாகவுள்ள பாரம், நிச்சயம் தியேட்டர்களில், கல் நெஞ்சம் கொண்ட பிள்ளைகளின் மனங்களை கரைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.