Don't Miss!
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சுவிட்சர்லாந்துக்கு சென்று ஒப்பாரி சொல்லிக் கொடுத்தேன்.. ’பாரம்’ ஜெயலக்ஷ்மி அம்மா பேட்டி!
Recommended Video
சென்னை: தேசிய விருது வென்றுள்ள பாரம் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.
இந்நிலையில், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுகுமார் சண்முகம் மற்றும் ஜெயலக்ஷ்மி அம்மா தமிழ் பிலிம் பீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், பாரம் படம் குறித்த பல்வேறு விசயங்களை தெரிவித்துள்ளனர்.
வயதான பெற்றோர்களை பாரமாக நினைத்து பெற்ற பிள்ளைகளே கொலை செய்யும் நெஞ்சை உருக்கும் கதையை படமாக எடுத்து பலரது மனங்களில் பாரத்தை சுமத்தி தேசிய விருது வென்றுள்ள இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி, பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தை இயக்காமல், நடிப்பு பள்ளியில் தேர்ச்சி பெற்ற புது முகங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
கன்னட படம் ஒன்றுக்கு கேஸ்டிங் டைரக்டராக இருந்த சுகுமார் சண்முகம், இந்த படத்திற்கு முதலில் கேஸ்டிங் டைரக்டராக ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர், ஒரு கதாபாத்திரத்திற்கு, யாருமே செட் ஆகாத நிலையில், இயக்குநர் பிரியா, நீங்களே பண்ணிடுங்க சுகுமார் எனக் கூறியதும், அந்த முக்கியமான ரோலில் நடித்து அசத்தியுள்ளார் சுகுமாறன்.
விமர்சனம்: வயதான தாய் தந்தைக்கு இதுதான் கதியா? தாங்க முடியாத வலி சொல்லும் 'பாரம்'
மேலும், பாரம் படத்தில் நடித்த, அத்தனை கலைஞர்களையும், தேர்வு செய்து, நடிப்பு பயிற்சியும் இவர் கொடுத்துள்ளார்.
சுகுமாரை தொடர்ந்து, இந்த படத்தில் கொல்லப்படும் தாத்தாவின் தங்கையாக நடித்துள்ளார் ஒப்பாரி பாட்டு புகழ் ஜெயலக்ஷ்மி அம்மா.
சுவிட்சர்லாந்து வரை சென்று, ஒப்பாரி பாடலை பிரபலப்படுத்தியுள்ள இவர், பாரம் படத்தில், மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கண்ணீர் வரவைத்துள்ளார்.
மேலும், தமிழ் பிலிமி பீட் நேயர்களுக்காக நெஞ்சை உருக்கும் ஒப்பாரி பாடல் ஒன்றையும் வீடியோவில் பாடியுள்ளார்.
வெற்றிமாறன் பேனரில் நாளை வெளியாகவுள்ள பாரம், நிச்சயம் தியேட்டர்களில், கல் நெஞ்சம் கொண்ட பிள்ளைகளின் மனங்களை கரைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.