விஜய்யுடன் மீண்டும் செல்ஃபி.. சர்ச்சைக்கு மத்தியில் திரிஷா செய்த வேலை.. பயில்வான் ரங்கநாதன் விளாசல்!
சென்னை: செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால் விவகாரத்து கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த செய்தி சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் இதுகுறித்து Frontvoods TV யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.
விஜய், சங்கீதா: அதில், கீர்த்தி சுரேஷ் திருமணத்தின் போது தனி விமானத்தில் திரிஷா, விஜய் இருவரும் சென்றார்கள், இரண்டு மாதத்திற்கு முன்பு கோவாவிற்கு த்ரிஷாவுடன் தனியாக சென்று வந்தார் விஜய். இரண்டு தினங்களுக்கு முன்பு உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா இவர்களின் திருமணத்திற்கு இருவரும் சென்று இருந்தார்கள். இவர்களின் திருமணத்தில் யாரும் செல்ஃபோன் கொண்டு வரக்கூடாது, பயன்படுத்தக் கூடாது என தடையை போட்டு இருந்தார்கள். இதனால் அவர்களின் திருமண புகைப்படம் எங்கேயும் வெளியாகவில்லை.

மீண்டும் செல்ஃபி: ஆனால், அந்த திருமண விழாவில் விஜயும் திரிஷாவும் ஒன்றாக சென்றது மட்டுமில்லாமல், த்ரிஷா வேண்டுமென்ற விஜய் உடன் செல்பி எடுத்து அதை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சர்ச்சைகள் இவ்வளவு சென்று கொண்டிருக்கும் நேரத்தில் திரிஷா எப்படி செய்யலாமா? இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாக இருக்கிறது. ஒருவேளை திரிஷா விஜய்யை பிளாக்மெயில் செய்கிறாரா? என்று தெரியவில்லை. 42 வயதாகி விட்டதால் இதுக்கு மேல் பெரிதாக படவாய்ப்பு வராது என்பதால் த்ரிஷா இப்படி இருக்கிறாரா? என தெரியவில்லை. ஆனால் விஜய் திரிஷாவை கண்டிக்கமுடியாத நிலையில் இருக்கிறார்.
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: இது எல்லாம் வதந்தி இதற்கு காரணம் திமுக என்று சொல்வது எல்லாம் பொய். அதே போல, இதன் மூலமாக விஜய்யின் மதிப்பு 30 சதவீதம் தான் குறையும், விஜயை தலைவர் ஏற்றுக்கொண்ட யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த விஷயத்தை விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். ஒன்று சங்கீதாவை விவகாரத்து செய்ய வேண்டும், இல்லை என்றால் சங்கீதாவுடன் வாழ வேண்டும். குடும்ப வாழ்க்கையில் இது ஒரு பிரச்சனையே இல்லை, இவை அனைத்தையும் மறந்து விட்டு குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ தொடங்கி விட்டால் நன்றாக இருக்கும். இந்த விஷயத்தில் விஜய் ஒரு நல்ல முடிவு எடுத்து பல சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











