ஓவர் ஆபாசம்.. கூமாபட்டி தங்கபாண்டி, சாந்தினி அடிக்கும் லூட்டி.. விளாசிய பயில்வான்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் ஏங்கா... நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க என வீடியோ வெளியிட்டு அந்த ஊரையே சுற்றுலாத்தளமாக்கினார் தங்கபாண்டி. இதையடுத்து பிரபலமான கூமாபட்டி தங்கபாண்டி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் நடிகை சாந்தினியுடன் ஜோடி சேர்ந்து பல கட்ட போட்டிகளை கடந்து டைட்டிலை வென்றனர்.
இதைத்தொடர்ந்து தங்கபாண்டியும், சாந்தினியும் இப்போது இலங்கை கடற்கரையில் ஜாலியாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர்கள் காதலர் தினத்தில் டப் பாத்தில் இருவரும் தண்ணீருக்குள் அமர்ந்து கொண்டு மிகவும் ஆபாசமாக கடந்து கொண்டார்கள். இதைப்பார்த்த பலர் கடுப்பாகி, ஆபாசத்தின் உச்சம் என்றும், இதெல்லாம் ரொம்ப ஓவர் என பலர் இவர்களை திட்டி வரும் நிலையில், பயில்வான் ரங்கநாதன் Puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இவர்கள் இருவரையும் கண்டபடி திட்டி உள்ளார்.

பயில்வான் ரங்கநாதன்: அதில், கூமாபட்டி தங்கபாண்டி கூமாபட்டி என்கிற இடத்தை ஒரு டூரிஸ்ட் ஸ்பார்ட்டாக அதை உருவாக்கிய அந்த நபர், இப்போது தனது பாதையை வேறு விதமாக மாற்றி கொண்டு சென்று கொண்டிருக்கிறார். இதன் மூலமாக அவரின் அழிவு மிக விரைவில் ஆரம்பமாகிவிடும். எந்த ஒரு நடிகரும் ஆபாசத்தை நோக்கி பயணம் செய்யக்கூடாது வித்தியாசமான கதையை சொன்னால் தான் அவரால் அடுத்த கட்டத்திற்கு பயணம் செய்ய முடியும்.
காமசூத்ராவை கையில் எடுக்கக்கூடாது: ஆனால், இவர்கள் இருவரும் கவர்ச்சி என்கிற பெயரில் டப் பாத்தில் தண்ணீரில் அமர்ந்து கொண்டு கசமுசா வேலைகளை செய்து வருகிறார்கள். இவர், இப்படி செய்ய தொடங்கி விட்டால், கூமாபட்டி தங்கபாண்டியிடம் இருந்து இனிமேல் இப்படித்தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். இதன் மூலமாக அவர் அழிவை அவரே தேடி கொள்கிறார். நான் அவருக்கு கொடுக்கும் அட்வைஸ் என்னவென்றால் தயவு செய்து இது போல் செய்யாமல் புதுசு புதுசா யோசித்து மக்களுக்கு கொண்டு சொல்ல வேண்டும். இதே போல, ஆபாசமாக நடித்துக் கொண்டு இருந்தால், நடிகை சாந்தினிக்கும் சினிமாவில் மரியாதை இருக்காது. இருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை இருக்கிறது. அதை நோக்கி தான் இவர்கள் பயணம் செய்ய வேண்டுமே தவிர,காமசூத்ராவை கையில் எடுக்கக்கூடாது என அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











