Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
“சேரனுக்கு ஒரு நியாயம்.. எனக்கு மட்டும் அநியாயமா?” வெளியேற்றப்பட்ட சரவணன் கொடுத்த முதல் பேட்டி!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் சரவணன் வேதனை அடைந்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தன்னை அவப்பெயருடன் வெளியேற்றியதால் நடிகர் சரவணன் வேதனை அடைந்துள்ளார்.
பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட விவகாரத்தில் நடிகர் சரவணனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றி இருக்கின்றனர். ஏற்கனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பிறகும், அவமானப்படுத்தும் வகையில் அவரை வெளியேற்றியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில், இரவோடு இரவாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணன், சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருப்பதாகத் தெரிகிறது. அதில் பிக் பாஸ் வீட்டில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
சேரன் - மீரா பிரச்சினை:
மேலும் அப்பேட்டியில், ‘பிக் பாஸ் வீட்டில் சேரன் பற்றி மீரா புகார் கூறினார். அப்போது, சேரனுக்கு ஆதரவாகவே பிக் பாஸ் குழு நடந்து கொண்டது. அந்த வாரம் மீரா வெளியே அனுப்பப்பட்டார். இதன் மூலம் சேரனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொண்டனர். ஆனால் என் விவகாரத்தில் அப்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை.
அவப்பெயர்:
பிக் பாஸ் வீட்டிற்குப் போனால், ஒரு சில வாரங்கள் தங்கி இருக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால், இப்படி அவப்பெயருடன் என்னை வெளியில் அனுப்புவார்கள் என எதிர்பார்க்கவில்லை. இந்த மாதிரி நடக்கும் எனத் தெரிந்திருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே வந்திருக்க மாட்டேன்.
கர்வம்:
நான் கூறிய பேருந்து சம்பவம் என் கல்லூரி காலத்தில் நடந்தது. அப்போது என் தந்தை போலீஸ் என்ற கர்வத்தில் அப்படி எல்லாம் நடந்து கொண்டேன். ஆனால், இப்போது அப்படி நடக்கும் இளைஞர்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. எனவே, அது மாதிரி யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான், அந்த விசயத்தை வெளிப்படையாகக் கூறினேன்.
சரியில்லை:
இந்த விவகாரம் தொடர்பாக என் மீது யாரும் போலீசில் புகார் அளித்துள்ளதாகத் தெரியவில்லை. நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பிறகும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இப்படி நடந்து கொண்டது சரியில்லை. சக போட்டியாளர்களுக்குக்கூட நான் ஏன் வெளியேற்றப் பட்டேன் என்ற காரணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெளியில் வந்த பிறகுதான் தெரிந்து கொள்வார்கள்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.