இலக்கியா ஒரு குப்பை.. தலைக்கேறிய போதையால் செய்த வேலை.. விளாசிய சேகுவேரா!
சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இலக்கியா, கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு பிரபலமானார். இரண்டு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என் சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வெச்சி ஏமாத்திட்டான் என பதிவிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து, இலக்கியா அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், போரூர் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ் பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, மூத்த பத்திரிக்கையாளர் Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஒழுக்கம் இல்லாத பெண்: டிக் டாக் இலக்கியா ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது இன்ஸ்டாகிராமில், ஒரு பதிவை போட்டுவிட்டு அந்த பதிவை டெலிட் செய்து விட்டு, அனைத்தும் போலியான செய்திகள் என மீண்டும் ஒரு பதிவை போட்டிருக்கிறார். இலக்கியாவை பற்றி பேசிவிட்டு நாம் தான் அசிங்கப்பட வேண்டும். இவர்களைப் பற்றி எல்லாம் நாம் பேசவே முடியாது. அந்தப் பெண் திலீப் சூப்பராயனுடன் தான் தொடர்பில் இருந்தாரா? இல்ல வேறு யாருடன் தொடர்பு இருந்தாரா என்பதையெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்க முடியாது. ஏனென்றால், இலக்கியா போன்றவர்கள் சமுதாயத்தில் ஒழுக்கம் இல்லாத பெண்கள்.
இலக்கியா ஒரு குப்பை: சமூகவலைத்தளத்தில் பல குப்பைகள் வருகின்றன அந்த குப்பைகளில் ஒன்று தான் இலக்கியா. ஆனால், இந்த பிரச்சனைகள் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அவர்களை இழுத்து விட்டிருக்கிறார். உண்மையில் அவர்களுக்குள் தொடர்பு இருக்கா.. இல்லையா என்பதை நாம் சொல்ல முடியாது. இலக்கியா சொல்வதெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. சினிமா என்பது ஒரு தொழில் அதில் கவர்ச்சி காட்டப்படுவதே விமர்சிக்கப்படும் போது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும், சமூக வலைதளங்களில் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி காட்டி ஆடும் இலக்கியாவை என்ன சொல்வது. சிறுவயதிலேயே அம்மாவை இழந்த இலக்கியா, பஞ்சு குடோனில் 5 ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்து, பிரபலமாக வேண்டும், ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற ஆசையால், சினிமாவிற்கு வந்து தனது உடலை காட்டி வாழ்க்கையை இழந்த பெண் தான் இலக்கியா என்று அந்த பேட்டியில் சேகுவேரா பேசி இருக்கிறார்.,
சட்டப்படி நடவடிக்கை: இலக்கியா தற்கொலை முயற்சிக்கு திலீப் சுப்பராயன் தான் காரணம் என செய்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பொய்யான செய்தி அந்த நபரே அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமும் அளித்துவிட்டார். இருப்பினும் என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால், என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்திகளை சில ஊடகங்கள் வெளியிடுகின்றன. இதனால், நானும் என் குடும்பமும் மிகுந்த மன வேதனை அடைகிறோம். இது முற்றியிலும் பொய்யான செய்தி என்பதை தெரிவித்து கொள்கிறேன். மீறி பொய்ய செய்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











