Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இது கனவு கண்ணாடி- சேரன்
நவ்யா நாயருடன் சேர்ந்து நடித்து வரும் மாயக்கண்ணாடியை இழைத்து இழைத்து உருவாக்கி வருகிறார் சேரன்.
சேரனும், நவ்யா நாயரும் இணைந்து நடித்து வரும் படம் மாயக் கண்ணாடி. படு நிதானமாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதற்கு சேரன் தரப்பு சொல்லும் காரணம், படத்தின் கதை அப்படி, நிதானமாக இழைத்து வருகிறார்சேரன். இதனால்தான் படத்தை முடிக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.நிதானமாக வளர்ந்தாலும் படு அற்புதமாக வந்திருக்கிறதாம் மாயக்கண்ணாடி. குறிப்பாக இசைஞானிஇளையராஜாவின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது என்கிறார்கள். அட்டகாசமான பின்னணிஇசையைக் கொடுத்துள்ள ராஜா, பாடல்களில் பின்னி எடுத்திருக்கிறாராம்.
இதைச் சொல்லி சொல்லி சந்தோஷப்படுகிறார் சேரன். அதேபோல நவ்யா நாயர் வரும் காட்சிகள் படு ரம்யமாகவந்திருக்கிறதாம். நவ்யா நாயரை இதுபோல அழகாக எந்தப் படத்திலும் காட்டியதில்லை என்று பெருமையாகசொல்கிறது மாயக்கண்ணாடி வட்டாராம்.
படத்தின் விசேஷம் என்னவோ? ஒவ்வொரு மனிதனுக்கும் கனவுகள் இருக்கும். அது பிம்பமாக இதயத்தில்நிறைந்திருக்கும். ஆனால் அத்தனையும் நிறைவேறி விடுகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நாம் நினைக்கும் கனவுகளில் 10 சதவீதம்தான் நிறைவேறும். மற்றவை கானல் நீராகவே இருக்கும். ஒரு சாதாரணமனிதனாக, பாமரனாக நான் கண்ட கீழ் நடுத்தர வர்க்கத்து ஏக்கங்களையும், கனவுகளையும் இப்படத்தில்பிரதிபலித்துள்ளேன். அதுதான் மாயக்கண்ணாடியாக மக்கள் முன் காட்சி தரப் போகிறது என்கிறார் சேரன்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக வேறு படங்களுக்கு கால்ஷீட் தராமல் உள்ளாராம் நவ்யா. அந்த அளவுக்குஒன்றிப் போய் விட்டாராம். ஒவ்வொரு காட்சியையும் சேரன் எடுக்கும் விதம் நவ்யாவை ரொம்பவே கவர்ந்துவிட்டதாம். இதனால்தான் இப்படத்தை முடிக்கும் வரை வேறு படத்தில் நடிப்பதில்லை என்று உறுதியாகஇருக்கிறாராம்.
அத்தோடு தனது காட்சிகள் இல்லாவிட்டாலும் கூட சேரன் படம் எடுக்கும் அழகை ரசிப்பதற்காக ஸ்பாட்டில்இருக்கிறாராம் நவ்யா. கிட்டத்தட்ட ஷூட்டிங் முழுவதும் அவரும் இருக்கிறார் என்கிறார்கள்.
கண்ணாடி உடையாம இருந்தா சரி!
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு