Don't Miss!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏமாந்த தீபு இயக்குனர் தென்னரசு தன்னை ஏமாற்றி விட்டதாக புலம்பி வருகிறார் தீபு என்ற தீபிகா.பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என் மன வானில் படத்தில் சின்னரோலில் அறிமுகமானவர் தீபு. ஹீரோயினுக்குரிய வயதில் அப்போது அவர்இருந்தாலும் உடனடியாக அந்த வாய்ப்பு கிட்டவில்லை.என் மன வானில் படத்தில் கிடைத்த அறிமுகத்தால் அன்பு பட நாயகி வாய்ப்புதீபுவைத் தேடி வந்தது.அன்புவில் தனது உச்சத்தைக் காட்டினார் தீபு. கிளாமரிலும் கில்லி போல துள்ளுவேன்என்பதை கோலிவுட்காரர்களுக்குப் புரிய வைத்தார். ஆனால், தொடர்ந்து ஹீரோயின்சான்ஸ் இல்லாமல் போனதால் கன்னடத்துக்குப் போனார்.இந் நிலையில் சமீபத்தில் வந்த திருப்பதி படத்தில் அஜீத்தின் தங்காச்சியாக நடித்துபெண்களை கண்ணை கசக்க வைத்தார் தீபு. நெடுநெடுவென குதிரை கணக்காக இருக்கும் தீபு இப்போது பிசியாகஇல்லாவிட்டாலும், எப்படிப்பட்ட ரோல் கொடுத்தாலும் பிச்சுப்புடுவேன், பிச்சு என்றுதலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்து சான்ஸ் தேடி வருகிறார்.இந் நிலையில் நம்ம தீபு கண்ணீரில் மூழ்கியுள்ளார். எல்லாம் மது பட இயக்குனர்தென்னரசு செய்த குழப்பத்தால்தான் என்று நம்மை பக்கத்தில் குந்த வைத்து கதைகதையாக புலம்பினார் தீபு.என்ன ஆச்சு என்று விசாரித்தபோது,மது படத்தில் ரமேஷ், பிரியா மணி ஜோடி போட்டு நடித்துள்ளனர். கூடவே தீபுவும்இருக்கிறார். படத்தில் புக் செய்தபோதே, இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள்.இருந்தாலும் இருவருக்கும் சம அளவில் காட்சிகளை வைத்துள்ளேன் என்றுதான்இயக்குனர் தென்னரசு தீபுவிடம் கூறினாராம்.அதை நம்பித்தான் தீபு, கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்தாராம். தென்னரசு சொன்னபடியெல்லாம் வந்து போனாராம் - படப்பிடிப்புக்குதாண்ணே.அப்படி இருந்தும், தென்னரசு மனம் கோணாமல் நடந்து கொண்டும், கடைசியில்தீபுவை டபாய்த்து விட்டாராம் தென்னரசு.மது படத்தில் தீபு முதல் பாதியில் அடங்காப் பிடாரியாக, படு மாடர்ன் கேர்ள் ஆக,கிளாமர் லேடியாக வருவாராம், பிற்பாதியில் மனம் திருந்தி, அடக்கம் ஒடுக்கம்அமருருள் உய்க்கும் என்ற வள்ளுவர் வாசகத்திற்கேற்ப மாறி விடுவாராம்.இதை சொல்லித்தான் தென்னரசு தீபுவை புக் பண்ணியுள்ளார். ஆனால் இப்போதுஎல்லாம் மாறி விட்டதாம். மூக்கைச் சிந்தியவாறு தீபு இப்படி அடுக்குகிறார்புகார்களை.எனக்குப் படத்தில் முக்கியத்துவமே இல்லாமல் செய்து விட்டார்கள்.இடைவேளைக்குப் பிறகு எனக்கு ஒரே ஒரு சீன் தான் கொடுத்துள்ளார் இயக்குனர். 3பாட்டுக்கள் எனக்குத் தருவதாக சொன்னார். இப்போதோ ஒரே ஒரு பாட்டுதான் வைத்துள்ளார்கள். கிளைமாக்ஸ் காட்சியைசொல்லியபடி எடுக்கவில்லை. படத்தின் இறுதி வரை நான் வருவது போல முதலில்சொன்னார். இப்போது எனது காட்சிகளை வெகுவாக குறைத்து விட்டார்.எனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தையும் இன்னும் கொடுக்கவில்லை. இதை நான்கேட்டு டப்பிங்குக்கு வர மறுத்தபோது, வேறு ஒரு பெண்ணை எனக்காக டப்பிங் பேசவைத்து விட்டார்கள்.போஸ்டரில் கூட எனது படம் இடம்பெறவில்லை. இப்படி ஒரு சீட்டிங்கை நான்பார்த்ததே இல்லை. இனிமேல் தென்னரசு மாதிரியான பொய் சொல்லிகளின் படத்தில்நான் நடிக்கவே மாட்டேன் என்று ஒங்கி ஒரு தும்மலைப் போட்டு புலம்பலைமுடித்தார் தீபு.அழகான பொண்ணுங்களை அழ விடலாமா தென்னரசு!
இயக்குனர் தென்னரசு தன்னை ஏமாற்றி விட்டதாக புலம்பி வருகிறார் தீபு என்ற தீபிகா.
பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என் மன வானில் படத்தில் சின்னரோலில் அறிமுகமானவர் தீபு. ஹீரோயினுக்குரிய வயதில் அப்போது அவர்இருந்தாலும் உடனடியாக அந்த வாய்ப்பு கிட்டவில்லை.
என் மன வானில் படத்தில் கிடைத்த அறிமுகத்தால் அன்பு பட நாயகி வாய்ப்புதீபுவைத் தேடி வந்தது.
அன்புவில் தனது உச்சத்தைக் காட்டினார் தீபு. கிளாமரிலும் கில்லி போல துள்ளுவேன்என்பதை கோலிவுட்காரர்களுக்குப் புரிய வைத்தார். ஆனால், தொடர்ந்து ஹீரோயின்சான்ஸ் இல்லாமல் போனதால் கன்னடத்துக்குப் போனார்.
இந் நிலையில் சமீபத்தில் வந்த திருப்பதி படத்தில் அஜீத்தின் தங்காச்சியாக நடித்துபெண்களை கண்ணை கசக்க வைத்தார் தீபு.
நெடுநெடுவென குதிரை கணக்காக இருக்கும் தீபு இப்போது பிசியாகஇல்லாவிட்டாலும், எப்படிப்பட்ட ரோல் கொடுத்தாலும் பிச்சுப்புடுவேன், பிச்சு என்றுதலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்து சான்ஸ் தேடி வருகிறார்.
இந் நிலையில் நம்ம தீபு கண்ணீரில் மூழ்கியுள்ளார். எல்லாம் மது பட இயக்குனர்தென்னரசு செய்த குழப்பத்தால்தான் என்று நம்மை பக்கத்தில் குந்த வைத்து கதைகதையாக புலம்பினார் தீபு.
என்ன ஆச்சு என்று விசாரித்தபோது,
மது படத்தில் ரமேஷ், பிரியா மணி ஜோடி போட்டு நடித்துள்ளனர். கூடவே தீபுவும்இருக்கிறார். படத்தில் புக் செய்தபோதே, இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள்.இருந்தாலும் இருவருக்கும் சம அளவில் காட்சிகளை வைத்துள்ளேன் என்றுதான்இயக்குனர் தென்னரசு தீபுவிடம் கூறினாராம்.
அதை நம்பித்தான் தீபு, கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்தாராம்.
தென்னரசு சொன்னபடியெல்லாம் வந்து போனாராம் - படப்பிடிப்புக்குதாண்ணே.
அப்படி இருந்தும், தென்னரசு மனம் கோணாமல் நடந்து கொண்டும், கடைசியில்தீபுவை டபாய்த்து விட்டாராம் தென்னரசு.
மது படத்தில் தீபு முதல் பாதியில் அடங்காப் பிடாரியாக, படு மாடர்ன் கேர்ள் ஆக,கிளாமர் லேடியாக வருவாராம், பிற்பாதியில் மனம் திருந்தி, அடக்கம் ஒடுக்கம்அமருருள் உய்க்கும் என்ற வள்ளுவர் வாசகத்திற்கேற்ப மாறி விடுவாராம்.
இதை சொல்லித்தான் தென்னரசு தீபுவை புக் பண்ணியுள்ளார். ஆனால் இப்போதுஎல்லாம் மாறி விட்டதாம். மூக்கைச் சிந்தியவாறு தீபு இப்படி அடுக்குகிறார்புகார்களை.
எனக்குப் படத்தில் முக்கியத்துவமே இல்லாமல் செய்து விட்டார்கள்.இடைவேளைக்குப் பிறகு எனக்கு ஒரே ஒரு சீன் தான் கொடுத்துள்ளார் இயக்குனர். 3பாட்டுக்கள் எனக்குத் தருவதாக சொன்னார்.
இப்போதோ ஒரே ஒரு பாட்டுதான் வைத்துள்ளார்கள். கிளைமாக்ஸ் காட்சியைசொல்லியபடி எடுக்கவில்லை. படத்தின் இறுதி வரை நான் வருவது போல முதலில்சொன்னார். இப்போது எனது காட்சிகளை வெகுவாக குறைத்து விட்டார்.
எனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தையும் இன்னும் கொடுக்கவில்லை. இதை நான்கேட்டு டப்பிங்குக்கு வர மறுத்தபோது, வேறு ஒரு பெண்ணை எனக்காக டப்பிங் பேசவைத்து விட்டார்கள்.
போஸ்டரில் கூட எனது படம் இடம்பெறவில்லை. இப்படி ஒரு சீட்டிங்கை நான்பார்த்ததே இல்லை. இனிமேல் தென்னரசு மாதிரியான பொய் சொல்லிகளின் படத்தில்நான் நடிக்கவே மாட்டேன் என்று ஒங்கி ஒரு தும்மலைப் போட்டு புலம்பலைமுடித்தார் தீபு.
அழகான பொண்ணுங்களை அழ விடலாமா தென்னரசு!..