அன்பு நல்லவரு-தேவயானி பைனான்சியர் மதுரை அன்புச் செழியன் ரொம்ப நல்லவர், அவர் என்னைக்கடத்தியதாக கூறப்படுவதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை, என்னுடையபெர்மிஷன் இல்லாமல் யாரும் என்னைத் தொட முடியாது என்று நடிகை தேவயானிகூறியுள்ளார்.மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியன். தொழில், பைனான்சியர். ஆனால், இவரைப்பற்றி கோலிவுட்டில் ஏகப்பட்ட வதந்திகள். சசிகலாவின் பினாமி என்று ஆரம்பித்துஇவர் மீது பல வதந்திகள் கோலிவுட்டில் உலா வருகின்றன.முன்பு ரம்பா, தேவயானயைக் கடத்தியதாக பரபரப்பான புகார் எழுந்தது. சமீபத்தில்பாலா விவகாரத்தில் அஜீத்தை ஹோட்டல் அறையில் வைத்து மிரட்டினார் என்றுகூறப்படுகிறது.கொடுத்த பணத்தைத் திருப்பித் தராவிட்டால் கடத்திக் கொண்டு போய் வைத்துமிரட்டியே பணத்தைக கறப்பதில் கில்லாடி அன்பு என்று கோலிவுட்டில் பீதியோடுகூறுகிறார்கள்.முன்பு நடிகை தேவயானி காதலுடன் என்ற சொந்தப் படத்தை எடுத்தார். அப்போதுவாங்கிய கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லையாம். இதனால் அன்புச்செழியன் அவரைக் கடத்திக் கொண்டு போய் தனது கஸ்டடியில் வைத்திருந்துபணத்தை வசூலித்தாராம்.இந்த செய்தியை அப்போதே அன்பு மறுத்தார். இந் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்அந்தச் செய்திகளை இப்போது மறுத்துள்ளார் தேவயானி. இதுகுறித்து தேவயானிஅளித்துள்ள பேட்டியில்,அன்பு ஒரு பக்கா ஜென்டில்மேன். அவரிடம் நான் வாங்கிய பணத்தை அசல், வட்டிகுறையாமல் அப்படியே கொடுத்து விட்டேன். அவரை ஏன் தாதா ரேஞ்சுக்கு இறக்கிக்கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.அவர் என்னைக் கடத்தினார், மிரட்டினார் என்று கூறுகிறார்கள். எல்லாம் தவறு. எனதுகற்புக்கு அவரால் களங்கம் ஏற்பட்டது என்றும் கூறுகிறார்கள். இது எதுவுமேநடக்கவில்லை என்பதுதான் உண்மை. நடக்காததை நடந்தது போல எழுதுகிறார்கள். என் அனுமதி இல்லாமல் யாரும்என்னைத் தொடக் கூட முடியாது.நநிாங்கள் பணத்தை வாங்கியபோதும், கொடுத்தபோதும் நேர்மையாக நடந்துகொண்டதால் அவர் கண்ணியமாகத்தான் நடந்து கொண்டார். அடுத்த படம் எப்போதுஆரம்பிக்கிறீர்கள், பணம் வேண்டும் என்றால் கேளுங்கள் தருகிறேன் என்றுதான்அவர் கூறினார்.படம் முடிந்ததும் நான் அவரைப் பார்க்க விரும்பி எனது கணவர் மூலம் தொடர்புகொண்டேன். அப்போது கூட வேண்டாம் என்றுதான் மறுத்தார். பிறகு நன்றிசொல்லத்தான் என்று கூறியதும் வரச் சொன்னார்.அப்போது அவருக்குக் கடைசியாகக் கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியோடுதிருப்பிக் கொடுத்தோம். அப்போது அவரது மனைவியும் உடன் இருந்தார்.எப்பவும் சிரித்த முகத்துடன் இருப்பவர் அன்புச் செழியன். அவர் என்னை மிரட்டினார்என்று கூறுவதை என்னால் நம்பவே முடியவில்லை. அப்போதுதான் அவரைக்கடைசியாகப் பார்த்தேன்.அதன் பிறகு பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் தேவயானி.அப்படியா?.. ஓகே..

By Staff
பைனான்சியர் மதுரை அன்புச் செழியன் ரொம்ப நல்லவர், அவர் என்னைக்கடத்தியதாக கூறப்படுவதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை, என்னுடையபெர்மிஷன் இல்லாமல் யாரும் என்னைத் தொட முடியாது என்று நடிகை தேவயானிகூறியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியன். தொழில், பைனான்சியர். ஆனால், இவரைப்பற்றி கோலிவுட்டில் ஏகப்பட்ட வதந்திகள். சசிகலாவின் பினாமி என்று ஆரம்பித்துஇவர் மீது பல வதந்திகள் கோலிவுட்டில் உலா வருகின்றன.

முன்பு ரம்பா, தேவயானயைக் கடத்தியதாக பரபரப்பான புகார் எழுந்தது. சமீபத்தில்பாலா விவகாரத்தில் அஜீத்தை ஹோட்டல் அறையில் வைத்து மிரட்டினார் என்றுகூறப்படுகிறது.

கொடுத்த பணத்தைத் திருப்பித் தராவிட்டால் கடத்திக் கொண்டு போய் வைத்துமிரட்டியே பணத்தைக கறப்பதில் கில்லாடி அன்பு என்று கோலிவுட்டில் பீதியோடுகூறுகிறார்கள்.

முன்பு நடிகை தேவயானி காதலுடன் என்ற சொந்தப் படத்தை எடுத்தார். அப்போதுவாங்கிய கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லையாம். இதனால் அன்புச்செழியன் அவரைக் கடத்திக் கொண்டு போய் தனது கஸ்டடியில் வைத்திருந்துபணத்தை வசூலித்தாராம்.

இந்த செய்தியை அப்போதே அன்பு மறுத்தார். இந் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்அந்தச் செய்திகளை இப்போது மறுத்துள்ளார் தேவயானி. இதுகுறித்து தேவயானிஅளித்துள்ள பேட்டியில்,

அன்பு ஒரு பக்கா ஜென்டில்மேன். அவரிடம் நான் வாங்கிய பணத்தை அசல், வட்டிகுறையாமல் அப்படியே கொடுத்து விட்டேன். அவரை ஏன் தாதா ரேஞ்சுக்கு இறக்கிக்கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

அவர் என்னைக் கடத்தினார், மிரட்டினார் என்று கூறுகிறார்கள். எல்லாம் தவறு. எனதுகற்புக்கு அவரால் களங்கம் ஏற்பட்டது என்றும் கூறுகிறார்கள். இது எதுவுமேநடக்கவில்லை என்பதுதான் உண்மை.

நடக்காததை நடந்தது போல எழுதுகிறார்கள். என் அனுமதி இல்லாமல் யாரும்என்னைத் தொடக் கூட முடியாது.

நநிாங்கள் பணத்தை வாங்கியபோதும், கொடுத்தபோதும் நேர்மையாக நடந்துகொண்டதால் அவர் கண்ணியமாகத்தான் நடந்து கொண்டார். அடுத்த படம் எப்போதுஆரம்பிக்கிறீர்கள், பணம் வேண்டும் என்றால் கேளுங்கள் தருகிறேன் என்றுதான்அவர் கூறினார்.

படம் முடிந்ததும் நான் அவரைப் பார்க்க விரும்பி எனது கணவர் மூலம் தொடர்புகொண்டேன். அப்போது கூட வேண்டாம் என்றுதான் மறுத்தார். பிறகு நன்றிசொல்லத்தான் என்று கூறியதும் வரச் சொன்னார்.

அப்போது அவருக்குக் கடைசியாகக் கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியோடுதிருப்பிக் கொடுத்தோம். அப்போது அவரது மனைவியும் உடன் இருந்தார்.

எப்பவும் சிரித்த முகத்துடன் இருப்பவர் அன்புச் செழியன். அவர் என்னை மிரட்டினார்என்று கூறுவதை என்னால் நம்பவே முடியவில்லை. அப்போதுதான் அவரைக்கடைசியாகப் பார்த்தேன்.

அதன் பிறகு பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் தேவயானி.

அப்படியா?.. ஓகே..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X