Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
அதெல்லாம் வதந்தி: தியா தனது கவர்ச்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு கோடம்பாக்கம் படத்தில் நன்றாக நடித்தும் தியாவுக்கு மார்க்கெட்சூடு பிடிக்கவில்லை.இதையடுத்து மலையாளத்துக்குப் போகிறார் இந்த சென்னை மாமி.தமிழில் குறும்பு, கற்க கசடற, ட்ரீம்ஸ்,கோடம்பாக்கம் என நடித்து முடித்துவிட்ட தியா முதல் மூன்று படங்களில்கிளாமரில் கிழங்கெடுத்தார். கோடம்பாக்ககத்தில் நடித்தார். நடித்தும் பலனில்லை, காட்டியும் பலனில்லை.இதனால் சொந்தப் படம் எடுக்கப் போகிறார் தியா என்று பேச்சு கிளம்பியுள்ளது.இது குறித்துக் கேட்டால், நான் நடிச்ச முதல் மூன்று பாடங்களில் நான் எதிர்பார்த்த கதையும், கேரக்டரும் எனக்குஅமையவில்லை. ஆனால், கோடம்பாக்கம் படத்தில் கதையும், என் கேரக்டரும் நன்றாக இருந்தது. ஆனால்,சரியாக விளம்பரம் செய்யபப்டாததால் அப்படம் ஒடவில்லை.என் திறமையை நிருபிக்க சொந்த படம் தயாரித்து எடுத்து நடிக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அந்தஎண்ணத்தை நான் இப்பொழுது கைவிட்டுவிட்டேன் . சொந்த படம் தயாரித்து வெற்றி பெறுவது என்பதுகஷ்டமான காரியம். போட்ட முதல் திரும்பி வருமா என்று உத்திரவாதமும் இல்லாத தயாரிப்பு துறையில் ஈடுபடபயமாக இருக்கிறது என்கிறார் தியா.தன்னை வைத்துப் படம் எடுக்கும் பார்ட்டிகளுக்கு தனக்கு நெருக்கமான இன்டஸ்ட்ரியலிஸ்டுகள் மூலம் தியாபைனான்ஸ் கூட ஏற்பாடு செய்து தருகிறார் என்றும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால், இதைதவறான செய்தி என்று மறுக்கும் தியா, அதெல்லாம் வெறும் வதந்திங்க என்கிறார்.நடித்துக் கொண்டே மலேசியாவில் வித்யாலயா என்ற நடனப் பள்ளியை நடத்தி வந்த தியா அதை இப்போசுமூடிவிட்டாராம். அடிக்கடி மலேசியாவுக்குப் போய் வர முடியவில்லை, இதனால் பள்ளியை சரியாக கவனிக்கமுடியலை. அதான் மூடிட்டேன். மனசுக்கு கஷ்டமா தான் இருந்தது. ஆனால், இப்போ சென்னையிலேயேவித்யாலயா நடனப் பள்ளியை துவங்கப் போகிறேன்.இங்கு பரதம், சால்ஸா, காண்டம்ப்ரரி, ரஷ்யன் பாலே நடனங்கள் கற்றுத் தரப் போகிறோம் என்றார்.டான்ஸ்னா அவ்ளோ இஷ்டமா என்று கேட்டால், முழுக்க முழுக்க நாட்டியத்திற்கு முக்கியதுவம் கொடுத்துயாராவது படம் எடுத்தா சம்பளமே வாங்காம நடிக்கக் கூட நான் ரெடி என்கிறார் தியா.இப்போ எந்தப் படம் தான் கையில இருக்கு என்று கேட்டால், இப்போதைக்கு மலையாளத்தில் ஒரு படத்தில்நடிக்கப் போகிறேன் என்றார் தியா.மம்மூட்டி நடிக்கும் இந்தப் படத்தில் தியா அவருக்கு ஜோடி இல்லையாம். சீனிவாசன் என்று ஒரு குட்டி நடிகருக்குஜோடியாம். மலையாளத்தில் ஏற்கனவே ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் அங்கும் ஒரு க்ரிப்கிடைக்கவில்லையாம் தியாவுக்கு.தியா பாவம் தான்...
தனது கவர்ச்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு கோடம்பாக்கம் படத்தில் நன்றாக நடித்தும் தியாவுக்கு மார்க்கெட்சூடு பிடிக்கவில்லை.
இதையடுத்து மலையாளத்துக்குப் போகிறார் இந்த சென்னை மாமி.
தமிழில் குறும்பு, கற்க கசடற, ட்ரீம்ஸ்,கோடம்பாக்கம் என நடித்து முடித்துவிட்ட தியா முதல் மூன்று படங்களில்கிளாமரில் கிழங்கெடுத்தார். கோடம்பாக்ககத்தில் நடித்தார். நடித்தும் பலனில்லை, காட்டியும் பலனில்லை.இதனால் சொந்தப் படம் எடுக்கப் போகிறார் தியா என்று பேச்சு கிளம்பியுள்ளது.
இது குறித்துக் கேட்டால், நான் நடிச்ச முதல் மூன்று பாடங்களில் நான் எதிர்பார்த்த கதையும், கேரக்டரும் எனக்குஅமையவில்லை. ஆனால், கோடம்பாக்கம் படத்தில் கதையும், என் கேரக்டரும் நன்றாக இருந்தது. ஆனால்,சரியாக விளம்பரம் செய்யபப்டாததால் அப்படம் ஒடவில்லை.
என் திறமையை நிருபிக்க சொந்த படம் தயாரித்து எடுத்து நடிக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அந்தஎண்ணத்தை நான் இப்பொழுது கைவிட்டுவிட்டேன் . சொந்த படம் தயாரித்து வெற்றி பெறுவது என்பதுகஷ்டமான காரியம். போட்ட முதல் திரும்பி வருமா என்று உத்திரவாதமும் இல்லாத தயாரிப்பு துறையில் ஈடுபடபயமாக இருக்கிறது என்கிறார் தியா.
தன்னை வைத்துப் படம் எடுக்கும் பார்ட்டிகளுக்கு தனக்கு நெருக்கமான இன்டஸ்ட்ரியலிஸ்டுகள் மூலம் தியாபைனான்ஸ் கூட ஏற்பாடு செய்து தருகிறார் என்றும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால், இதைதவறான செய்தி என்று மறுக்கும் தியா, அதெல்லாம் வெறும் வதந்திங்க என்கிறார்.
நடித்துக் கொண்டே மலேசியாவில் வித்யாலயா என்ற நடனப் பள்ளியை நடத்தி வந்த தியா அதை இப்போசுமூடிவிட்டாராம். அடிக்கடி மலேசியாவுக்குப் போய் வர முடியவில்லை, இதனால் பள்ளியை சரியாக கவனிக்கமுடியலை. அதான் மூடிட்டேன். மனசுக்கு கஷ்டமா தான் இருந்தது. ஆனால், இப்போ சென்னையிலேயேவித்யாலயா நடனப் பள்ளியை துவங்கப் போகிறேன்.
இங்கு பரதம், சால்ஸா, காண்டம்ப்ரரி, ரஷ்யன் பாலே நடனங்கள் கற்றுத் தரப் போகிறோம் என்றார்.
டான்ஸ்னா அவ்ளோ இஷ்டமா என்று கேட்டால், முழுக்க முழுக்க நாட்டியத்திற்கு முக்கியதுவம் கொடுத்துயாராவது படம் எடுத்தா சம்பளமே வாங்காம நடிக்கக் கூட நான் ரெடி என்கிறார் தியா.
இப்போ எந்தப் படம் தான் கையில இருக்கு என்று கேட்டால், இப்போதைக்கு மலையாளத்தில் ஒரு படத்தில்நடிக்கப் போகிறேன் என்றார் தியா.
மம்மூட்டி நடிக்கும் இந்தப் படத்தில் தியா அவருக்கு ஜோடி இல்லையாம். சீனிவாசன் என்று ஒரு குட்டி நடிகருக்குஜோடியாம். மலையாளத்தில் ஏற்கனவே ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் அங்கும் ஒரு க்ரிப்கிடைக்கவில்லையாம் தியாவுக்கு.
தியா பாவம் தான்...