அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு’..சிங்கம் பட வசனம்..ரகசியத்தை உடைத்த இயக்குநர் ஹரி
சென்னை: இயக்குனர் ஹரி என்றாலே பரபரப்பு , துடிதுடிப்பு என்று எப்போதும் இருக்கும். அப்படி பட்ட ஹரி தனது படங்களின் வசனங்களை பற்றி நம்மிடையே பகிர்ந்து உள்ளார்.
Recommended Video
மேலும் அவர் கூறுகையில், நாம் எதார்த்தமாக பேசுவதை தான் தனது படங்களில் வசனமாக வைப்பதாகவும் தெரிவித்தார்.
போலீஸ் துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய எண்ணம் நிறைவேறாத பட்சத்தில் தனது படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு போலீஸ் யூனிபார்ம் போட்டு அழகு பார்க்கும் இயக்குநர் ஹரி, நமது பிலிம்பீட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

உண்மையான குட்மார்னிங் எது?
கேள்வி: நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க காரணம் என்ன?
பதில்: நான் இவ்வளவு வேகமாக செயல்படுவதற்கு காரணம் என்னுடைய குருநாதர்கள் கே.பாலச்சந்தர், மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் தான். இயக்குநர் கே.பாலசந்தரின் மூளை வேற மாதிரி செயல்படும். ஷாட் எங்க வைக்கலாம்? எப்படி வைக்கலாம் என்பது குறித்த சிந்தனையில் தான் இருப்பார். காலையில் அவருக்கு குட்மார்னிங் சொன்னால் ம்...ம்...ம்... என்பார். ஆனால் ஷாட் முடிந்த பிறகு சொல்லும் குட்மார்னிங் தான் உண்மையான குட்மார்னிங். இயக்குநர் செந்தில்நாதனை பொறுத்தவரை 2 மணி நேரம் தூங்குவது பெரிய விஷயம். அந்தளவுக்கு அவர் கடுமையான உழைப்பாளி என்றார் ஹரி .

போர்க்களம் எது?
கேள்வி: படப்பிடிப்பின்போது பரபரப்பாக இருப்பது போல் வீட்டிலும் இருப்பீர்களே?
பதில்: வேலை வேறு.. வாழ்க்கை வேறு. வேலை என்பது போர்க்களம். வாழ்க்கை என்பது பூக்களம். இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
கேள்வி: உங்களுடைய ஹேர்ஸ்டைல் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: எனக்கென்று ஹேர்ஸ்டைல் கிடையாது. சீப் எல்லாம் நான் பயன்படுத்துவது கூட கிடையாது. சும்மா கை வைத்து கோதி விட்டு செல்வது தான் இப்போது வழக்கமாக உள்ளது. ஆனால் கல்லூரி காலக்கட்டத்தில் சீப்பை அதிகமாக பயன்படுத்தியதால் தான், இந்த மாதிரியாகி விட்டது என்ரூ வருத்தத்துடன் சிரித்தபடியே கூறினார் .

சினிமா எப்படிப்பட்டது?
கேள்வி: ஹாலிவுட் படங்கள் போன்று நீங்கள் எப்போது படம் எடுப்பீர்கள்.
பதில்: தேவர்மகன் திரைப்படத்தில் வரும் சிறிய பாடல் போன்று எனது படங்களில் சிறிய பாடல்கள் கண்டிப்பாக இருக்கும். நான் முந்தைய இயக்குனர்கள் செய்வதை பார்த்து தான் செய்கிறேன். ஒரு புத்தகத்தை படிக்கும்போது மட்டும் தான் தகவல்களை சேகரிக்க முடியும். அந்த தகவல்களை வைத்து நாம் புத்தகம் எழுத முடியும். அது போன்று தான் சினிமாவும். நான் ஹாலிவுட் படங்களை பார்த்து தான் சிங்கம் 2 வில் பிற்பகுதியில் திரைக்கதை அமைத்திருப்பேன். ஹாலிவுட் படம் மாதிரி திரைக்கதை எழுத நமக்கு வருமா? பட்ஜெட் ஒத்து வருமா? ஒரு வேளை சரியாக வரவில்லையென்றால் ரிஸ்க் ஆகிவிடும். எப்பொழுது ஹாலிவுட் போன்று திரைக்கதை எழுதுகிறேனோ அன்று அதே மாதிரி படங்களை எடுப்பேன் என்றார்.
அடிச்சா ஒன்றரை டன் வெயிட் வசனம்
கேள்வி: உங்கள் படத்தில் இடம்பெறும் வசனங்கள் எதன் அடிப்படையில் எழுதுகிறீர்கள்?
பதில்: வசனம் எழுதும்போது என்னுடன் இரண்டு அசிஸ்டென்ட இயக்குநர்கள் மற்றும் மேலும் இரண்டு நெருக்கமான சினிமா நண்பர்கள் இருப்பார்கள். அவ்வாறு இருக்கும்போது வசனத்தை நான் பேசுவதை ரிக்கார்டு செய்ய சொல்வேன். அப்போது இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். அதை குறித்து கொள்ள சொல்வேன். பின்பு நாம் எதார்த்தமாக பேசுவதை வசனமாக வைப்பேன். நான் அடிச்சா ஒன்றரை டன் வெயிட் வசனம் சிங்கம் படத்தில் இது போன்று அமைந்தது தான் என்று ஹரி கூறி உள்ளார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/5MILtZ_iybY இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.இயக்குநர் ஹரி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











