Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மாரி செல்வராஜ் பிறந்த நாள்.. மகளிர் தினம்.. பெண் இயக்குநர்கள்.. பா. ரஞ்சித்தின் பக்கா பேட்டி!
சென்னை: ஆர்ட் கஃபே எனும் புதுமையான ரெஸ்டாரன்ட் துவக்க விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா. ரஞ்சித் அளித்துள்ள முழு பேட்டி வெளியாகி உள்ளது.
Recommended Video
இயக்குநர் மாரி செல்வராஜின் பிறந்த நாள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் தனது தம்பி போன்றவர் என்றும், அவரது படைப்புகள் சமூக கருத்துக்கள் சார்ந்து, அருமையாக இருக்கிறது என்றும் கூறினார்.
பா. ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் படமும் மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது, நிச்சயம் அதை அவர் பூர்த்தி செய்வார் என ரஞ்சித் பேசினார்.
பின்னர், நாளை கொண்டாடப்படவுள்ள மகளிர் தினம் குறித்த கேள்விக்கு, தமிழ் சினிமாவில், பல பெண் இயக்குநர்கள் சமீப காலமாக சிறந்த படங்களை இயக்கி வருகின்றனர்.
எந்த பெண்ணுக்கும், ஆண் என்பவன் சுதந்திரம் கொடுக்க முடியாது. மேலும், பெண் இயக்குநர்கள், பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை தான் படமாக எடுக்க வேண்டும் என்று திணிக்கக் கூடாது என்றார்.
சில்லுக்கருப்பட்டி இயக்கிய ஹலிதா ஷமீம், சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா உள்ளிட்ட பல பெண்கள் தற்போது, சினிமாவில் அசத்தி வருவதையும் பா. ரஞ்சித் மேற்கோள் காட்டி பாராட்டி இருந்தார்.
இயக்குநர் பா. ரஞ்சித், நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள முழு பேட்டியை காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க..