Don't Miss!
- Sports ஐபிஎல் 2024 - சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு பாதிப்பு.. புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
சென்னை: 16 வருடங்களுக்கு பிறகு நடிகர் அருண்பாண்டியன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் அன்பிற்கினியாள்.
இந்த படத்தில் நடிகர் அருண் பாண்டியன் அவரின் மகள் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குனர் கோகுல் படத்தை இயக்கியுள்ளார்.
பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் ரெடி...இளைஞர்களை கவர கவர்ச்சியும் ரெடி
மகளிர் தினத்தை போற்றும் வகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சுவாரசியமாக இந்த பேட்டியில் பதில் கூறியுள்ளார் அருண் பாண்டியன்.
உலகம் எங்கும்
மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினம் உலகமெங்கும் கொண்டாப்பட்டு வருகிறது. தாயாக, தங்கையாக, தோழியாக, காதலியாக பெண்களை போற்றும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகிழ்ச்சி அளிக்கிறது
தனக்கு 3 மகள், 1 பேத்தி, மனைவி என வீட்டில் மொத்தம் 5 பெண்கள் எனவும், தன்னை சூழ்ந்து எப்போதும் அவர்கள் இருப்பார்கள் அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். தனித்தனியாக அவரவர்களை குறித்த தகவல்களையும் கூறியுள்ளார்.
எப்போதும் அம்மா
குடும்பத்தை தவிர்த்து உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத பெண்மணி யார் என்ற கேள்விக்கு, குடும்பத்தை தவிர்க்கும் வகையில் இல்லாமல் தன் வாழ்வில் மறக்க முடியாத பெண்மணி எப்போதும் அம்மா தான் என குறிப்பிட்டுள்ளார் அருண்பாண்டியன்.
சிறப்பு பேட்டி
பெண்கள் தினத்தை முன்னிட்டு பொதுவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, எப்போதும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் எனவும், உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களையும் இந்த பேட்டியில் கூறி சிறப்பித்துள்ளார் அருண்பாண்டியன்.