Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Exclusive: sarvam thalamayam: சர்வம் தாளமயம்.. இன்றைய கால சூழலில் ஒரு முக்கியமான படம்: ஜி.வி.பிரகாஷ்
சர்வம் தாளமயம் படம் பற்றி ஒன்இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.
சென்னை: சினிமாவில் நேர்மையான அரசியல் இருக்க வேண்டும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். முதலில் இளைஞர்களை கவரும் வகையிலான படங்களையே பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஜாலியான படங்களுக்கு மத்தியில் கருத்தாழம் மிக்க படங்களிலும் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
நாச்சியார் படம் இவர் மீதான இமேஜை வேறு தளத்திற்கு மாற்றியது. தற்போது இவர் நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.யின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஒன்இந்தியா தளத்திற்காக ஜி.வி.யை சந்தித்தோம். அப்போது அவர் பேசியதாவது
சர்வம் தாளமயம் படவாய்ப்பு:
சில நல்ல விஷயங்கள் தானாக அமையும். அப்படி அமைந்தது தான் சர்வம் தாளமயம். ஒருநாள் ராஜீவ் மேனன் சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஏதோ விளம்பரத்துக்கு இசையமைக்க தான் கூப்பிடுகிறார் என நினைத்தேன். அங்கு போன பிறகு சர்வம் தாளமயம் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
மிக மகிழ்ச்சி:
சரி படத்துக்கு இசையமைப்பதற்காக கூப்பிட்டிருக்கிறார் என நினைத்தேன். ஆனால் நான் நடிப்பதற்காக தான் என்னிடம் கதை சொல்கிறார் என்பது பிறகு தான் தெரிந்தது. மிகவும் சந்தோஷப்பட்டேன்.
கடின உழைப்பு:
இந்த படத்துக்காக ராஜீவ் மேனன் நிறைய உழைத்திருக்கிறார். அதே போன்றதொரு உழைப்பை தர வேண்டும் என என்னிடம் கூறினார். நானும் என்னால் முடிந்த அளவிற்கு உழைத்தேன். அதன் பலன் இப்போது தெரிகிறது. என்னை பொறுத்தவரை பலனை எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலனை கடவுள் என்றைக்காவது ஒருநாள் கொடுப்பார்.
மிருதங்கம் கற்றேன்:
இந்த படத்திற்காக நான் உமையாள்புரம் சிவராமன் சாரிடம் மிருதங்கம் கற்றுகொண்டு, நிறைய காட்சிகளில் நானே வாசித்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் மிருதங்கம் வாசித்தேன். இதற்காக கடுமையாக உழைத்தேன். அதற்கான பாராட்டு தான் இது.
நேர்மையான அரசியல்:
இன்றைய சினிமாவில் நிச்சயம் நேர்மையான அரசியல் இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் அது ரசிகர்களை எளிதாக சென்றடையும். இந்த படத்தில் கர்நாடக இசையின் அழகையும் பதிவு செய்திருக்கிறோம். அதேபோல் முக்கியமான ஒரு சமூக பிரச்சினை பற்றியும் கூறியுள்ளோம். இன்றைய கால சூழலில் இது ஒரு முக்கியமான படம். ஒரு புதுமையான படமாக இருக்கும்.
இளம் விஞ்ஞானி கதை:
அடுத்து ஐங்கரன்னு ஒரு படம் பண்ணுகிறேன். அது ஒரு இளம் விஞ்ஞானியை பற்றிய கதை. ஜெயில், வாட்ச்மேன், 100 பர்சென்ட் காதல், குப்பத்து ராஜா, என நிறைய படங்கள் செய்கிறேன். சிறு வயதில் இருந்தே ஆக்டிவாக இருப்பதால், நிறைய விஷயங்களில் கவனம் செலுத்த முடிகிறுது.
ஜெயில் பட பாடல்கள்:
ஹீரோ ஜி.வி.பிரகாஷ் தான் இப்போது நிறைய வெளியில் தெரிகிறார். அதனால் இசையமைப்பாளர் ஜி.வி.யை மிஸ் செய்வதாக நிறைய பேர் கூறுகின்றனர். இந்த இடைவெளியை உடைக்கும் வகையில் ஜெயில் படத்தின் பாடல்கள் இருக்கும். அப்படத்தின் பாடல்கள் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
சந்தோசமான வாழ்க்கை:
எனது மனைவியும் ஒருபக்கம் அவரது வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். அவருடைய வெற்றி என்னை சார்ந்து இருக்கக் கூடாது என நினைக்கிறேன். யார் சொன்னாலும் எனது பெயரை அவரது பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளக் கூடாது என சொல்லியிருக்கிறேன். எனவே குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது", என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!