Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரஜினி மாதிரி சத்யராஜையும் மன்னிப்பு கேட்க சொல்லுங்க: வாட்டாள் நாகராஜ்- எக்ஸ்க்ளூசிவ்
பெங்களூர்: சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனையின்போது கன்னடர்களுக்கு எதிராக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்காத வரை பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டி,
பப்ளிசிட்டி
விளம்பரம் தேடுவதற்காக பாகுபலி 2 படத்தை வெளியிடவிடாமல் செய்கிறீர்களா என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், நாங்கள் படத்திற்கு எதிராக இல்லை. படத்தில் நடித்துள்ள சத்யராஜுக்கு தான் எதிராக உள்ளோம். காவிரி, கன்னடம், கர்நாடகா, கன்னடர்களுக்கு எதிராக பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அது வரை போராடுவோம். ரஜினிகாந்த் போன்று அவரும் மன்னிப்பு கேட்டுவிட்டால் படத்தை எதிர்க்க மாட்டோம் என்றார்.
பாகுபலி
அது ஏன் பாகுபலி 2 படத்தை எதிர்க்கிறீர்கள்? சத்யராஜின் பிற படங்கள் ரிலீஸானபோது எங்கே சென்றீர்கள் என்ற கேள்விக்கு வாட்டாள் கூறுகையில், சத்யராஜின் கருத்தை நாங்கள் எப்பொழுதுமே எதிர்க்கிறோம். அவரின் பிற படங்கள் இங்கு வெளியாகியுள்ளன ஆனால் தற்போது தான் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் ஒன்று கூடி போராட முன்வந்துள்ளன என்றார்.
சந்தர்ப்பவாதி
பாகுபலி போன்ற மெகா படத்தை எதிர்க்கும் நீங்கள் சந்தர்ப்பவாதி அல்லவா என்ற கேள்விக்கு வாட்டாள் நாகராஜ் கூறுகையில், இல்லை இல்லை. தற்போது தான் அனைத்து கன்னட அமைப்புகளும் ஒன்று கூடியுள்ளன என்றேன். சத்யராஜ் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது என்கிறார்.
சத்யராஜ்
சத்யராஜ் அப்படி என்ன சொல்லிவிட்டார்? என்ற கேள்விக்கு வாட்டாளின் பதில், நாங்கள் தாய் போன்று மதிக்கும் காவிரியை அவர் தனது மனைவியோடு ஒப்பிட்டுவிட்டார். அவர் கன்னடர்கள் மற்றும் கர்நாடகாவை அவமதித்துவிட்டார். அவர் அசிங்கமாக பேசியபோது மேடையில் கமல், ரஜினி இருந்தனர். அவர் என்னை நேரடியாக தாக்கிப் பேசினார். அப்படி இருக்கும்போது கேள்வி கேட்கக் கூடாதா?
அரசு
அரசு ஆதரவுடன் படம் ரிலீஸானால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், ராணுவமே வந்தாலும் போராடுவோம். படம் ரிலீஸானால் எதிர்ப்போம். முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். தியேட்டரை விடுங்க பாத்ரூமில் கூட அந்த படம் ஓடக் கூடாது என்றார்.
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!