Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நோ நொம்பலம், ப்ளீஸ் ரொம்பவே நொந்து, நொம்பலத்தில் மூழ்கிக் கிடக்கிறார் கோபிகா.ஆட்டோகிராப் வந்த போது இவர் எங்கேயோ போகப் போகிறார் என்று கோலிவுட் பண்டிதர்கள் (கமல் பாஷையில்!) கணிப்புகூறினார்கள். அதற்கேற்ப வேகமாக முன்னேறி வந்தார் கோபிகா. ஆனால் இப்போது எங்கேயும் போக முடியாமல்,மலையாளத்தில் சரணடைந்துள்ளார் கோபிகா.தனது இந்த நிலைக்கு முக்கியக் காரணம் தன்னைப் பற்றி சரமாரியாக வெளியான வதந்திகள்தான் என்று கோபிகாவருத்தப்படுகிறார். நான் நடிக்க வந்த புதிதில் என்னைப் பற்றி உயர்வாக எழுதிய பத்திரிகைகளே என்னைப் பற்றி ஏகப்பட்டவதந்திகளை செய்திகளாக வெளியிட்டதால் நான் ரொம்பவே நொந்து போனேன்.நடிகர் பரத்துடன் காதல், ஸ்ரீகாந்த்துடன் நெருக்கம் என வந்த வதந்திகள் என்னை நிலை குலைய வைத்து விட்டன. இதனால்எனக்கு வந்த பல பட வாய்ப்புகள் பாதியிலேயே போய் விட்டன. இதுதான் தமிழ் சினிமாவில் இப்போது நான் படம்ஏதுமில்லாமல் இருக்க முக்கியக் காரணம் என்று புலம்புகிறார் கோபிகா.காட்சிக்குத் தேவைப்பட்டதால் தான் ஸ்ரீகாந்துடன் கணாக்கண்டேன் படத்தில் மிக நெருக்கமாக நடித்தேன். ஆனால், அதைவைத்தே கிசுகிசு கிளப்பிவிட்டுவிட்டார்கள். அதன்ல் தான் அவரோடு பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோதுமறுத்துவிட்டேன்.இதை விட உச்சகட்டமாக சேரனுக்கும் எனக்கும் மோதல், அவர் கால்ஷீட் கேட்டபோது நான் கொடுக்கவில்லை, புதிய படம்தொடர்பாக அவர் பேச அழைத்தபோது அதை ஏற்று நான் போகவில்லை என்றெல்லாம் தவறான செய்திகள் வந்து எனக்குபெரும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டன.இப்படிப் பரவிய செய்திகளால்தான் தமிழ் பட வாய்ப்பு மங்கிப் போய் விட்டது. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளையாரும் பரப்ப வேண்டாம். அது ஒருவருடைய மனதை கிழித்துப் போட்டு விடும். வதந்தி பரப்பி இனிமேல் என்னை யாரும் நோகவைக்காதீர்கள்.நல்ல வேளையாக, மலையாளத் திரையுலகம் என்னைக் கைவிடவில்லை. இப்போது கை நிறைய படங்களுடன் பிசியாகத்தான்உள்ளேன். என்ன, என்னை வாழ வைத்த தமிழ் திரையுலகில் நான் இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது கஷ்டமாகஉள்ளது.இருந்தாலும் இந்த நிலை மாறும், மீண்டும் உங்களை சந்திக்க, சந்தோஷப்படுத்த கண்டிப்பாக வருவேன் என்று படு உறுதியாகவும்கூறுகிறார் கோபிகா.கோபிகா இப்படிக் கூறினாலும், அவர் கேட்ட சம்பளம், ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டிய சில பந்தாக்களால்தான் கோபிகாவுக்கு படவாய்ப்புகள் குறைந்து போய் விட்டதாக கோலிவுட்காரர்கள் தனியாக புலம்புகிறார்கள்.
ஆட்டோகிராப் வந்த போது இவர் எங்கேயோ போகப் போகிறார் என்று கோலிவுட் பண்டிதர்கள் (கமல் பாஷையில்!) கணிப்புகூறினார்கள். அதற்கேற்ப வேகமாக முன்னேறி வந்தார் கோபிகா. ஆனால் இப்போது எங்கேயும் போக முடியாமல்,மலையாளத்தில் சரணடைந்துள்ளார் கோபிகா.
தனது இந்த நிலைக்கு முக்கியக் காரணம் தன்னைப் பற்றி சரமாரியாக வெளியான வதந்திகள்தான் என்று கோபிகாவருத்தப்படுகிறார். நான் நடிக்க வந்த புதிதில் என்னைப் பற்றி உயர்வாக எழுதிய பத்திரிகைகளே என்னைப் பற்றி ஏகப்பட்டவதந்திகளை செய்திகளாக வெளியிட்டதால் நான் ரொம்பவே நொந்து போனேன்.
காட்சிக்குத் தேவைப்பட்டதால் தான் ஸ்ரீகாந்துடன் கணாக்கண்டேன் படத்தில் மிக நெருக்கமாக நடித்தேன். ஆனால், அதைவைத்தே கிசுகிசு கிளப்பிவிட்டுவிட்டார்கள். அதன்ல் தான் அவரோடு பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோதுமறுத்துவிட்டேன்.
இதை விட உச்சகட்டமாக சேரனுக்கும் எனக்கும் மோதல், அவர் கால்ஷீட் கேட்டபோது நான் கொடுக்கவில்லை, புதிய படம்தொடர்பாக அவர் பேச அழைத்தபோது அதை ஏற்று நான் போகவில்லை என்றெல்லாம் தவறான செய்திகள் வந்து எனக்குபெரும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டன.
நல்ல வேளையாக, மலையாளத் திரையுலகம் என்னைக் கைவிடவில்லை. இப்போது கை நிறைய படங்களுடன் பிசியாகத்தான்உள்ளேன். என்ன, என்னை வாழ வைத்த தமிழ் திரையுலகில் நான் இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது கஷ்டமாகஉள்ளது.
கோபிகா இப்படிக் கூறினாலும், அவர் கேட்ட சம்பளம், ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டிய சில பந்தாக்களால்தான் கோபிகாவுக்கு படவாய்ப்புகள் குறைந்து போய் விட்டதாக கோலிவுட்காரர்கள் தனியாக புலம்புகிறார்கள்.