Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோக்கள் தலையில் தட்ட வேண்டும்- கேவி ஆனந்த் திடீர் ஆவேசம்
சூர்யாவை வைத்து மாற்றான் என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கேவி ஆனந்த்.
படத்தின் அறிமுக பிரஸ் மீட் நேற்று நடந்தது. கேவி ஆனந்த் பேசும்போது, "ஒரு படம் சிறப்பாக வர நடிகர் நடிகைகளைத் தாண்டி ஏராளமான தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது. ஆனால் படம் ஜெயித்ததும் அதற்கு நான்தான் காரணம் என்று எந்த நடிகராவது சொன்னால் அவர்களின் தலையில் தட்ட வேண்டும். இந்த தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் படத்தின் வெற்றிக்கு உண்மையான காரணம். மாற்றான் படத்தில் பலரது உழைப்பு உள்ளது. பல ஆராய்ச்சிகள் செய்து விஷயங்களைச் சேர்த்திருக்கிறோம்.
சென்னையில் மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் இரண்டு சூர்யாக்களும் ஒட்டியிருப்பது போல காட்டியிருக்கிறோம்," என்றார்.
கேவி ஆனந்த் பேச்சை எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் சூர்யா.
இந்தப் படத்தில் மெசேஜ் சொல்லியிருப்பதாக கதாசிரியர்கள் இருவரும் சொன்னார்களே, என்ன மெஸேஜ் அது? என்று கேட்டபோது, "மெஸேஜ் சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதி வந்துவிட்டதாக நினைக்கவில்லை. ஆனால் சமூகத்துக்கு தேவையான சில விஷயங்களை மேலோட்டமாக சொல்லியிருக்கிறேன்," என்றார்.