Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இரண்டாவது கல்யாணம் பண்ணும் போது.. நானே சொல்வேன்.. சோனியா அகர்வால் செம பேட்டி!
சென்னை: சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என அந்த விளம்பரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், சொந்த தொழிலுக்கான விளம்பரம் என்பதை ரிவீல் செய்து இருந்தார்.
அது குறித்து முழு விபரங்களை நமது தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் சோனியா அகர்வால் பல விசயங்களை மனம் திறந்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர், செல்வராகவனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் தொடரவில்லை. இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை!
கடந்த ஆண்டு அருண் விஜய்க்கு அம்மாவாக தடம் படத்தில் நடித்திருந்தார். அதே நேரத்தில், அவர் சோலோ ஹீரோயினாக நடித்த தனிமை படமும் வெளியாகி இருந்தது.
சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வராத நிலையில், சொந்த தொழில் ஆரம்பிக்க நினைத்த சோனியா அகர்வால், திருமணம் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை சிலருடன் இணைந்து தொடங்கியுள்ளார். சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தை இயக்கியுள்ள ஆனந்த் பால்கி, ஃபேஷன் டிசைனர் ஷிட்னி, 'சமையல் சமையல்' வெங்கடேஷ் பட், பிரியா ஆகியோருடன் இணைந்து இதைத் தொடங்கி உள்ளார். இது தொடர்பான பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனக்கு மறுமணம் நடந்தால், மீடியாக்களில் கிசுகிசுக்கள் பரவுவதற்கு முன்னதாக, தானே முதல் ஆளா வந்து அறிவிப்பேன் என்றும் போல்டாக கூறியுள்ள ஹாட் பேட்டியை காணத் தவறாதீர்கள்.