Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இரண்டாவது கல்யாணம் பண்ணும் போது.. நானே சொல்வேன்.. சோனியா அகர்வால் செம பேட்டி!
சென்னை: சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என அந்த விளம்பரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், சொந்த தொழிலுக்கான விளம்பரம் என்பதை ரிவீல் செய்து இருந்தார்.
அது குறித்து முழு விபரங்களை நமது தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் சோனியா அகர்வால் பல விசயங்களை மனம் திறந்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர், செல்வராகவனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் தொடரவில்லை. இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை!
கடந்த ஆண்டு அருண் விஜய்க்கு அம்மாவாக தடம் படத்தில் நடித்திருந்தார். அதே நேரத்தில், அவர் சோலோ ஹீரோயினாக நடித்த தனிமை படமும் வெளியாகி இருந்தது.
சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வராத நிலையில், சொந்த தொழில் ஆரம்பிக்க நினைத்த சோனியா அகர்வால், திருமணம் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை சிலருடன் இணைந்து தொடங்கியுள்ளார். சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தை இயக்கியுள்ள ஆனந்த் பால்கி, ஃபேஷன் டிசைனர் ஷிட்னி, 'சமையல் சமையல்' வெங்கடேஷ் பட், பிரியா ஆகியோருடன் இணைந்து இதைத் தொடங்கி உள்ளார். இது தொடர்பான பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனக்கு மறுமணம் நடந்தால், மீடியாக்களில் கிசுகிசுக்கள் பரவுவதற்கு முன்னதாக, தானே முதல் ஆளா வந்து அறிவிப்பேன் என்றும் போல்டாக கூறியுள்ள ஹாட் பேட்டியை காணத் தவறாதீர்கள்.