twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பணம் இல்லை, தூக்கம் இல்லை, நெஞ்சுவலி வேறு: நடிகை பகீர் பேட்டி

    By Siva
    |

    மும்பை: பணம் இல்லை, நண்பர்கள் இல்லை, தூக்கம் இல்லை, நெஞ்சுவலியுடன் கஷ்டப்பட்டதாக பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ராவும் அக்கா வழியில் நடிகையாகிவிட்டார். 2014-2015ம் ஆண்டு பரினீத்தி சோப்ராவின் கெரியர் செம அடி வாங்கியது. இதனால் அவர் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டுள்ளார்.

    இது குறித்து பரினீத்தி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

    பணம்

    பணம்

    2014ம் ஆண்டின் இறுதி மற்றும் 2015ம் ஆண்டு தான் என் வாழ்வின் மோசமான நேரம் ஆகும். நான் நடித்த தவாத் இ இஷ்க் மற்றும் கில் தில் ஆகிய படங்கள் ஓடவில்லை. அது தான் முதல் பின்னடைவு. திடீர் என்று என்னிடம் பணம் இல்லை. நான் நிறைய பணம் சம்பாதித்தேன். ஆனால் ஒரு வீடு வாங்கியதுடன், பெரிய முதலீடுகள் செய்துவிட்டேன்.

    தூக்கம்

    தூக்கம்

    என் வாழ்வில் எதுவுமே சரியில்லாமல் போனது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். சரியாக தூங்குவதை நிறுத்திவிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. நான் யாரையும் சந்திப்பது இல்லை. நான் யாருடன் எல்லாம் டச்சில் இருந்தேனோ அவர்களிடம் இருந்து விலகிவிட்டேன். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அவர்களுடன் பேசினேன். குடும்பத்தாரை விட்டே விலகினேன்.

    நெஞ்சுவலி

    நெஞ்சுவலி

    நான் எப்பொழுது பார்த்தாலும் என் அறையில் தான் இருந்தேன். டிவி பார்ப்பது, தூங்குவது என்று என் வாழ்க்கை சென்றது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். ஒரு நாளைக்கு 10 முறையாவது அழுதுள்ளேன். தொடர்ந்து நெஞ்சுவலி இருந்து கொண்டே இருந்தது. 2016ம் ஆண்டில் தான் நான் குணமாகத் துவங்கினேன். ஃபிட்டாகி, கோல்மால் அகெய்ன், மேரி பியாரி பிந்து ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகினேன்.

    நண்பர்கள்

    நண்பர்கள்

    புது வீட்டிற்கு சென்றேன். இப்படியே மன அழுத்தத்தில் இருந்தால் சரிபட்டு வராது என்று முடிவு செய்தேன். அதன் பிறகு என் வாழ்க்கை நல்லவிதமாக மாறியது. நண்பர்களை மீண்டும் சந்திக்கத் துவங்கினேன். பல பேருக்கு போன் செய்து டச்சில் இல்லாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டேன். 25 வயதிலேயே கஷ்டப்பட்டுவிட்டதால் இனி வாழ்க்கையில் எதையும் சந்திக்கத் துணிவு வந்துவிட்டது என்று பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.

    English summary
    Bollywood actress Parineeti Chopra has talked about the worst time in her life when she was battling depression.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X