Don't Miss!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பணம் இல்லை, தூக்கம் இல்லை, நெஞ்சுவலி வேறு: நடிகை பகீர் பேட்டி
மும்பை: பணம் இல்லை, நண்பர்கள் இல்லை, தூக்கம் இல்லை, நெஞ்சுவலியுடன் கஷ்டப்பட்டதாக பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ராவும் அக்கா வழியில் நடிகையாகிவிட்டார். 2014-2015ம் ஆண்டு பரினீத்தி சோப்ராவின் கெரியர் செம அடி வாங்கியது. இதனால் அவர் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டுள்ளார்.
இது குறித்து பரினீத்தி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
பணம்
2014ம் ஆண்டின் இறுதி மற்றும் 2015ம் ஆண்டு தான் என் வாழ்வின் மோசமான நேரம் ஆகும். நான் நடித்த தவாத் இ இஷ்க் மற்றும் கில் தில் ஆகிய படங்கள் ஓடவில்லை. அது தான் முதல் பின்னடைவு. திடீர் என்று என்னிடம் பணம் இல்லை. நான் நிறைய பணம் சம்பாதித்தேன். ஆனால் ஒரு வீடு வாங்கியதுடன், பெரிய முதலீடுகள் செய்துவிட்டேன்.
தூக்கம்
என் வாழ்வில் எதுவுமே சரியில்லாமல் போனது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். சரியாக தூங்குவதை நிறுத்திவிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. நான் யாரையும் சந்திப்பது இல்லை. நான் யாருடன் எல்லாம் டச்சில் இருந்தேனோ அவர்களிடம் இருந்து விலகிவிட்டேன். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அவர்களுடன் பேசினேன். குடும்பத்தாரை விட்டே விலகினேன்.
நெஞ்சுவலி
நான் எப்பொழுது பார்த்தாலும் என் அறையில் தான் இருந்தேன். டிவி பார்ப்பது, தூங்குவது என்று என் வாழ்க்கை சென்றது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். ஒரு நாளைக்கு 10 முறையாவது அழுதுள்ளேன். தொடர்ந்து நெஞ்சுவலி இருந்து கொண்டே இருந்தது. 2016ம் ஆண்டில் தான் நான் குணமாகத் துவங்கினேன். ஃபிட்டாகி, கோல்மால் அகெய்ன், மேரி பியாரி பிந்து ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகினேன்.
நண்பர்கள்
புது வீட்டிற்கு சென்றேன். இப்படியே மன அழுத்தத்தில் இருந்தால் சரிபட்டு வராது என்று முடிவு செய்தேன். அதன் பிறகு என் வாழ்க்கை நல்லவிதமாக மாறியது. நண்பர்களை மீண்டும் சந்திக்கத் துவங்கினேன். பல பேருக்கு போன் செய்து டச்சில் இல்லாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டேன். 25 வயதிலேயே கஷ்டப்பட்டுவிட்டதால் இனி வாழ்க்கையில் எதையும் சந்திக்கத் துணிவு வந்துவிட்டது என்று பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.