Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நான் எந்த தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அட்ஜஸ்ட் செய்வதும் இல்லை: 'ஸ்கெட்ச்' நடிகை
சென்னை: தான் ஒரு தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை ஸ்ரீப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.
நிலா மீது காதல் படம் மூலம் நடிகையானவர் ஸ்ரீ ப்ரியங்கா. கங்காரு, வந்தா மல, விக்ரமின் ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மிக மிக அவசரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ப்ரியங்கா பற்றி ஒரு தகவல் பரவியது.
தயாரிப்பாளர்
ஸ்ரீ ப்ரியங்கா தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர் சொல்படி மட்டுமே நடப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. மேலும் ஸ்ரீ ப்ரியங்கா அந்த தயாரிப்பாளரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஸ்ரீ ப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.
செய்தி
அண்மையில் ஒரு பத்திரிகையில் என்னை பற்றி தவறான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. என் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் சிலர் இவ்வாறு என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதை அந்த பத்திரிகை செய்தி மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நேரத்தில் உண்மையை சொல்ல விரும்புகிறேன் என்று ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
இல்லை
நான் தயாரிப்பாளர் அல்லது மேனேஜரின் கட்டுப்பாட்டில் இல்லை. நான் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நான் நடித்துள்ள ஜெஸ்ஸி படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுவரை நான் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன் என்று ஸ்ரீ ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
அட்ஜஸ்ட்
என் நடிப்பு மற்றும் நடத்தை மீது யாருமே குறை கூறியது இல்லை. என்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்பது இல்லை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறேன். படத்தின் பட்ஜெட், ஹீரோ என்று எதற்காகவும் நான் அட்ஜஸ்ட் செய்தது இல்லை என்று ஸ்ரீ ப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.