வீடியோ கால் பேசினா சந்தேகப்படுறாங்க.. "தென்றல் வந்து என்னை தொடும்" ராஜ்குமார் சிறப்பு நேர்காணல்!

சென்னை: வள்ளி, தங்கம், வாணி-ராணி ஆகிய தொடர்களில நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் ராஜ்குமார். தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 'இது சொல்ல மறந்த கதை' தொடரில் நடித்து வருகிறார்.

தன்னை பற்றி பல பேர் தப்பாக நினைக்கிறார்கள் என்று 'இது சொல்ல மறந்த கதை' தொடரில் நடிக்கும் ராஜ்குமார் கூறியுள்ளார்.

இவரை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை நமது பிலீம் பீட் சேனலுக்கு சிறப்பு நேர்காணல் மூலம் கூறியுள்ளார்.

 கடவுள் கொடுத்த வரம்

கடவுள் கொடுத்த வரம்

கேள்வி: உங்கள் கன்னத்தில் குழி விழுவது குறித்து ...

பதில்: கன்னத்தில் குழி விழுவது என்பது கடவுள் கொடுத்த வரம். அம்மா, அப்பா கொடுத்த பரிசு. கன்னத்தில் சதை மிஸ்ஸாகி போனதே கன்னத்தில் குழிவிழுதல் ஆகும். இது உண்மை. சில சமயங்களில் நான் நடித்துவிட்டு ப்ரேமில் வந்து பார்க்கும்போது எனது கன்னத்தில் குழிவிழுவதை பார்க்கும்போது ஆசையாக இருக்கும் என்றார்.

 ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

கேள்வி: வள்ளி தொடரில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்: வள்ளி தொடரில் நான் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட். முதலில் நான் நடிக்க கமிட் ஆனேன். பின்பு வேறு நடிகரை வைத்து படப்பிடிப்புக்கு சென்றார்கள். மீண்டும் எனக்கே அதே தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. என்னை தேடி எனக்காக வந்த வாய்ப்பு தான் வள்ளி தொடர். 7.5 வருடமாக அந்த தொடரில் பயணித்துள்ளேன். பொது இடங்களில் என்னை பார்க்கும் சிலர் விக்கி என்று அழைத்து, நான் திரும்பி பார்ப்பதும் உண்டு. இந்த தொடர் மூலம் எனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது என்றார்.

செதுக்கினார்கள்

செதுக்கினார்கள்

கேள்வி: நீங்கள் இந்த இடத்திற்கு வர காரணமானவர் யார்?

பதில்: இந்த துறைக்கு வருபவர்கள் கற்றுக் கொண்டு வருவது கிடையாது. நானும் அப்படித்தான். ஆர்வம் மட்டுமே இருந்தது. பயிற்சியும், முயற்சியும் கூட கிடையாது. ஒவ்வொருவரின் அறிமுகம் மூலம் தான் நான் வளர்ந்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது தான் நமக்கு தெரியும், எது வரும், வராது என்று... ஒவ்வொரு இயக்குநர்களும் என்னை செதுக்கினார்கள். இன்னும் சொல்லப்போனால் என் கையை பிடித்து கொண்டு அழைத்து கொண்டு சென்றார்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். தங்கம் தொடரில் இயக்குநர் சுலைமான், வாணி ராணி தொடரில் இயக்குநர்கள் ரத்னம், சுந்தரேசன், தங்கபாண்டியன், விஜய் டிவி ப்ரவின் ஆகியோர்கள் எனது வழிகாட்டிகள். மேலும் என்னுடன் நடிக்கும் நடிகர்களும், இந்த காட்சியை இப்படி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று அறிவுரைகளும் தான் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்திருக்கிறது என்றார். இது சொல்ல மறந்த கதை தொடரில் நடிக்கும்போது, யாரும் ஸ்கிரிப்ட் படி யாரும் வசனம் பேசமாட்டோம். அந்த சமயத்தில் என்ன வசனம் தோன்றுகிறதோ அப்படியே பேசுவோம் என்றார்.

 இரண்டு குழந்தைகளுக்கு தாய்

இரண்டு குழந்தைகளுக்கு தாய்

கேள்வி: நடிகை ரக்ஷிதா நடிப்பு குறித்து உங்கள் கருத்து?

பதில்: நடிகை ரக்ஷிதாவும், நானும், சரவணன் மீனாட்சி 3ல் இணைந்து பணியாற்றியுள்ளோம். இது சொல்ல மறந்த கதை தொடரில் அவருக்கான கதாபாத்திரம் ரொம்ப போல்டான கதை. டெஸ்ட் ஷூட்டிங்கின்போது அவரிடம் நான் கேட்டேன். இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்ற கதாபாத்திரத்தில் எப்படி நடிக்கிறீர்கள் என்றேன். கதை தனக்கு ரொம்ப பிடித்திருந்ததாகவும், கதை மீது நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். நடிகை ரக்ஷிதா குறித்து கூற வேண்டுமென்றால் படப்பிடிப்பின்போது உண்மையாக இருப்பார். கதைக்கு என்னென்ன தேவையோ அத்தனை செய்வார். கோபம், சந்தோஷத்தில் ஆகிய இரண்டிலும் உச்சத்திற்கு செல்லும் நபர் அவர் என்றார்.

 மோதல் - காதல்

மோதல் - காதல்

கேள்வி: படப்பிடிப்பின்போது உங்கள் மனைவி வீடியோ காலில் வருவது எதனால்?

பதில்: என் மீது எனது மனைவி அளவுக்கடந்த அன்பு கொண்டவர். மற்றவர்களின் பார்வையில் என் மனைவி என் மீது சந்தேகப்படுகிறார் என்று கருதுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர் எனது ரசிகை. அவருடன் மோதலில் ஈடுபட்டு, பின்னர் காதலாகி திருமணத்தில் முடிந்தது. தற்போது கிருத்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. என் மனைவி, என் மீது அன்கண்டிஷனல் லவ் வைத்துள்ளார். எனது மனைவி ராகவியின் சொந்த ஊர் ராணிப்பேட்டை. அங்கு தான் எனது குடும்பம் இருக்கிறது. படப்பிடிப்பிற்கு நான் இங்கு வரும் சமயங்களில் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவார். அதனால் அன்பை பரிமாறிக்கொள்ள எங்களுக்கு உதவுவது வீடியோ கால் மட்டுமே. அது மற்றவர்களின் பார்வையில் தவறாக தெரிகிறது என்றார்.

வாய்ப்புகள் அதிகம்

கேள்வி: உங்களது அடுத்த லட்சியம் என்ன?

பதில்: நான் நடிக்க வந்தலிருந்து தொடர்ச்சியாக நடித்து கொண்டிருக்கிறேன். தற்போது சிறிது ஓய்வு கிடைக்கிறது. வெள்ளித்திரைக்கு செல்வது குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன். நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்கு சென்றது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. சிலர் அங்கு வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சிலர் அங்கேயும் இங்கேயும் இருக்கிறார்கள். தற்போது சினிமாத்துறையில் ஒடிடி போன்ற தளங்களின் வருகையால் வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. அந்த வாய்ப்பை நானும் விரைவில் பயன்படுத்துவேன் என்றார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும், கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை தொடரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X