இளையராஜா பற்றி தெரியாத ஒரு சுவாரஸ்யம்.. இயக்குநர் முருக சுப்பிரமணியத்தின் சுவாரஸ்ய பேட்டி!
சென்னை: இசைஞானி இளையராஜா இசையமைத்த ஒரே குறும்படத்தின் இயக்குநர் முருக சுப்பிரமணியத்தின் சுவாரஸ்ய பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமா பிரிவில் இயக்குநராக பயின்று வந்த காலத்தில், இறுதி ஆண்டு எடுக்க வேண்டிய குறும்படத்திற்கு, இசை இசையமைப்பாளர் இளையராஜா தான் இசை அமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள், பெரிய பெரிய படங்களுக்கே அவரது கால்ஷீட் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. உன் குறும்படத்துக்கு அவர் எப்படி மியூசிக் போடுவார் என கிண்டலாக பேசியுள்ளனர்.
விடாப்பிடியாக இருந்த இவர், தனது குறும்படத்தை இயக்கி எடிட் பண்ணி பார்த்த பின்னர், இளையராஜா இசை இருந்தால் தான் இந்த குறும்படம் சிறப்பாகும் என்று உறுதியாக நம்பியவர், பிரசாத் ஸ்டூடியோவிற்கு கிளம்பி இளையராஜாவை சந்திக்க முயற்சி செய்துள்ளார்.
விடா முயற்சியின் பலனாக அவரது கமலம் எனும் குறும்படத்திற்கு இசையமைத்து கொடுத்துள்ளார் இளையராஜா.
குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து அந்த குறும்படம் உருவானது. வீட்டு வேலை செய்யும் சிறுமிக்கு இருக்கும் படிக்க வேண்டும் என்ற கனவை மையமாக வைத்து அந்த குறும்படத்தை இயக்குநர் முருக சுப்பிரமணியம் இயக்கியதையும், இளையராஜாவின் தாராள மனசு குறித்தும் மேலும், பல சுவாரஸ்யங்கள் குறித்து அவர் பேசியுள்ள பேட்டியை கண்டு மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications











