நல்லா நடிக்கிறீங்கனு தனுஷ் பாராட்டினார்.. கர்ணன் பட நடிகர்கள் சிறப்பு பேட்டி!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது கர்ணன் திரைப்படம்.
திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தில் தான் மொத்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.

அந்த கிராமத்து மனிதர்களாக கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மதன் உள்ளிட்ட நடிகர்கள் அளித்த பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் சொந்த பந்தங்களாகவே வாழ்ந்தோம் என்றும், அனைவரையும் கவனமாக பார்த்துக் கொண்டார் என்றும் சக நடிகர்கள் சந்தோஷமாக சொல்லி உள்ளனர்.
நடிகர் மதன் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் கர்ணன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், படத்தை பார்த்த தனுஷ், தனது நடிப்பு நன்றாக இருந்தது என பாராட்டியது தனக்கு பல தேசிய விருதுகளை கொடுத்தது போல இருந்தது என்று கூறியுள்ளார் மதன்.
மேலும், அந்த படத்தில் ஊர் மக்களாக நடித்த சில நடிகைகளும் வட்டார வழக்கு முதல் கர்ணன் படப்பிடிப்பில் தங்களுக்கு கிடைத்த அனைத்து அனுபவங்களையும் பகிர்ந்துள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











