Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அவருக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருந்தது.. பாவம் கணேசன் சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி
சென்னை: பாவம் கணேசன் சீரியலில் நடித்து வரும் நடிகை விலாசினியின் பரபரப்பு பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சொந்தக்கார பெண்ணான இவருக்கு திருமண உறவு சரியாக அமையவில்லை.
சபரி ஞானபிரகாசம் என்பவருடன் ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.
பெல் பாட்டம் பட ரிலீசுக்கு வந்த சிக்கல்...பாவம் அக்ஷய் குமார்
பாவம் கணேசன் சீரியல் நடிகை
பெரிய குடும்ப பெண்ணான விலாசினி கருப்பாக இருப்பதால் விஜேவாகும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக இந்த பேட்டியில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பாடகியாக வர வேண்டும் என நினைத்த இவர், தற்போது பாவம் கணேசன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இளையராஜா மருமகள்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவியின் சகோதரர் மகள் தான் இந்த விலாசினி. இளையராஜா உள்பட பல பிரபலங்கள் இணைந்து நடத்திய இவரது திருமண வாழ்க்கை இப்படியொரு நிலைமைக்கு வந்து நிற்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கணவருடன் விவாகரத்து
சபரி ஞானபிரகாசம் பல மோசடி செயல்களில் ஈடுபடும் நபர் என்பது தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தினார் என்றும் அவரிடம் இருந்து பிரிந்து வாழ்வது தான் தனக்கு தற்போது நிம்மதியை அளிக்கிறது என இந்த பேட்டியில் கூறியுள்ளார் விலாசினி.
பெண்ணுடன் தொடர்பு
சாதாரண குடும்ப பிரச்சனைகளையும் தாண்டி அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் தான் அவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும், தனது நண்பர்களுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த இரு பாகங்கள் கொண்ட பேட்டி வீடியோ வைரலாகி வருகிறது.