Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புதிய சர்ச்சையில் மீரா!
மீரா ஜாஸ்மின் நல்ல நடிப்புக்காக பேசப்பட்டாலும் கூட அவ்வப்போது சர்ச்சையிலும் அடிபட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.
சில வாரங்களுக்கு முன்பு தெலுங்குப் படப்பிடிப்பு ஒன்றில் ஹீரோ பவன் கல்யாணுடன், தகராறில் ஈடுபட்டதாக மீரா மீது புகார் எழுந்தது.
அடுத்த நாளே, மலையாள தயாரிப்பாளர் தம்பி ஆண்டனி, மீரா ஜாஸ்மின் மீது பரபரப்பு புகாரை எழுப்பினார். அவர் 'கொல்கத்தா நியூஸ்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். பிளஸ்ஸிதான் இப்படத்தைஇயக்குகிறார்.
மீரா செய்த தாமதத்தால், 6 மாதங்களாக இப்படப்பிடிப்பு இழுத்து வருவதாகவும், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும் தம்பி ஆண்டனி புகார் கூறினார். மேலும் மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் அவர் மீரா மீது புகார் பதிவு செய்தார்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் ஒரு பிளாட் வாங்க விரும்பிய மீராவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக துபாயில் இருந்த தனது வீட்டை விற்றதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் தம்பி ஆண்டனி.
ஆனால் இதை மீரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பற்றிய இன்னும் ஒரு தவறான செய்தி இது. என் மீது எவ்வளவு சுலபமாக அவதூறைகள அள்ளி வீசுகிறார்கள் பாருங்கள்.
கொல்கத்தா நியூஸ் படத்திற்காக எனக்கு என்ன சம்பளம் தந்தார்கள் என்பதை அவர்கள் கூற முடியுமா? மலையாளத் திரையுலகில் எவ்வளவு சம்பளம் தருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
நான் வாங்குகிற சம்பளம், துபாயில் உள்ள வீட்டின் மதிப்புக்கு சமமானதா என்பதை நீங்களே சொல்லுங்கள்?
நான் ஒரு பிளாட் வாங்கினேன். இல்லை என்று சொல்லவில்லை. நான் தங்குவதற்காக அந்த வீட்டை வாங்கினேன். ஆனால் யாருடைய பணத்திலும் அதை வாங்கவில்லை. எனது சொந்தப் பணத்திலிருந்துதான் அதை வாங்கினேன்.
நான் பிளாட் வாங்கியது குறித்து தயாரிப்பாளர் தம்பி ஆண்டனி கவலைப்படத் தேவையில்லை. முதலில் நான் கொடுத்த கால்ஷீட்டை சரியாக அவர் பயன்படுத்தட்டும். அதை விடுத்து தேவையில்லாத புகார்களை அவர் கூறக் கூடாது.
என் மீது துவேஷம் கொண்டுள்ள சில பத்திரிக்கையாளர்கள்தான் இப்படி அவதூறான செய்தியை, தயாரிப்பாளருக்காக பரப்பி விடுகின்றனர் என்றார் மீரா.
ஏற்கனவே மீராவுக்கு கொச்சி, பெங்களூர், சென்னையில் வீடுகள் உள்ளன. சமீபத்தில் கேரள மாநிலம் சோரனூரில் பெரிய பங்களா ஒன்றையும் அவர் கட்டி முடித்தார். இந்த நிலையில் கொல்கத்தாவில் பிளாட் வாங்கியதாகவும், அதில் தயாரிப்பாளர் பணம் போண்டியானதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே