Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழ் சினிமாவை ஆராயும் விமர்சகர் பிரசாந்துடன் ஒரு சந்திப்பு
Recommended Video
சென்னை : சினிமா விமர்சகர் இட்இஸ் பிரசாந்துடன் ஒரு சுவாரசியமான சந்திப்பு.
தமிழ் சினிமாவின் உயரம் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. முன்பெல்லாம் விமர்சனங்கள் என்றால் ஒரு படங்கள் வெளியாகி ஏறக்குறைய ஒருவாரம் அல்லது மூன்று மற்றும் நான்கு நாட்கள் கழித்து தான் தெரியவரும். ஆனால் தற்போது உள்ள சமூகத்தில் ஆபார வளர்ச்சியால் சமூக ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. அதில் திரைப்படங்களுக்கான விமர்சனங்கள் செய்யும் ஊடகங்கள் மிக அதிகம்.
அதில் முக்கியமான ஒன்று தான் தமிழ் சினிமா ரீவியூ இது யூடியூப் தளத்தில் இயங்குகிறது. இதனை நடத்தி வருபவர் இட்இஸ் பிரசாந்த் மிகவும் பிரபலமானவர். இவர் நமது பிலிமி பீட் சேனலுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
சேனல் ஆரம்பித்த பொழுது
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரீவியூ என்ற சேனலை ஆரம்பித்தேன். தனது முதல் விமர்சனமாக கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை விமர்சனம் sசெய்ததாகவும் அச்சமயம் அதை செய்யும் பொழுது அந்த அனுபவம் வித்தியாசமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யை சந்தித்த தருணம்
சிறு வயதில் திரையில் பார்த்து மிம்மித்த ஒருவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது மிக்க மகிழ்ச்சி என்று கூறினார். மற்றும் அந்த சமயத்தில் நான் விஜய் நடித்த புலி படத்தை பற்றி விமர்சனம் செய்ததாகவும் அதன் பின் அவரை சந்தித்து என் கல்யாண பத்திரிக்கை கொடுக்க சென்ற தகவலை நம்மிடம் கூறினார்.
நடிகர் அஜித் என்னை வாழ்த்தினார்.
நான் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்கள் அனைவரையும் சந்தித்துள்ளேன். ஆனால் தலை அஜீத் அவர்களை மட்டும் இன்னமும் நான் சந்தித்து பேசியதில்லை என்று கூறினார். பில்லா இரண்டாம் பாகம் ரீலிஸ் ஆனபோது, என்னிடம் தொலைபேசியில் பேசினார். என்னுடைய விமர்சனத்தை பாராட்டினார். என் குடும்பத்தினர் பற்றி விசாரித்தார் அந்த தருணம் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது என்று சுவாரசியத் தகவலை தெரிவித்தார்
படங்கள் பற்றிய விமர்சனம்
நான், கடந்த பத்து வருடங்களாக பல படங்களை பற்றி விமர்சனம் செய்து வருகிறேன். ஆனால் என் மேல் பல விமர்சனங்கள் ஏற்பட்டன அவை அனைத்தையும் கடந்து தற்போது மீண்டு வந்துள்ளேன் என்றும் பிரசாந்த் கூறினார்.
தன்னுடன் பணியாற்றுபவர்கள்.
தனக்கு விச்சு என்பவர் கேமரா பார்த்து கொள்வதாகவும் மற்றும் இன்னமும் சிலர் புகைபடக்கலைஞர் மற்றுமொருவர் எடிட்டிங் போன்ற வேலைகளை செய்ய பலர் தன்னுடன் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.