Don't Miss!
- News பேராசான் பெரியார் மண்ணில் இருந்து.. இன்று பிரசாரத்தை தொடங்கும் முன்னரே சரவெடி கொளுத்திய கமல்ஹாசன்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
இது நேர்மைக்கு கிடைத்த விருது - 'வாகை சூட வா' சற்குணம்!
தமிழில் சிறந்த படமாக வாகை சூட வா படத்தைத் தேர்ந்தெடுத்து தேசிய விருது அறிவித்திருக்குறது மத்திய அரசு.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் சற்குணம் கூறுகையில், "நேர்மையாகவும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் எடுத்த படம் இது. இந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். மக்களுக்கு இன்னும் நல்ல கருத்துக்களை கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தை இந்த விருது எனக்கு கொடுத்து இருக்கிறது.
தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, சின்னச்சின்ன விஷயங்களை கூட அந்த படத்தில் மிகநுட்பமாக செய்து இருந்தேன். ஒரு நகரம் உருவாவதற்கு செங்கற்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்த செங்கல் உருவாவதற்கு இயற்கை அழிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது.
விழிப்புணர்வு கருத்துகள்
வாகை சூடவா படத்தில் குழந்தை தொழிலாளர் உள்பட சில விழிப்புணர்வான கருத்துக்களையும், காதலையும் 'சென்டிமென்ட்'' கலந்து கொடுத்திருந்தேன். இந்த படத்துக்கு விருது கிடைத்து இருப்பதை மிக மிகப் பெருமையாக கருதுகிறேன்," என்றார்.
ஆரண்ய காண்டம்
அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது பெறும் ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன், சமுதாயத்தில் இருண்ட பகுதியை சித்தரிக்கும் இதுபோன்ற படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியையும் வியப்பையும் அளிப்பதாக தெரிவித்தார்.