இயக்குநர் சுசீந்திரனுடன் பணியாற்றியது எப்படி இருந்தது.. மனம் திறந்த காஸ்ட்யூம் டிஸைனர் நிரூபமா!
Recommended Video
சென்னை: சுசீந்திரனுடன் ஏஞ்சலினா படத்தில் பணியாற்றியது குறித்தும் மற்ற முக்கிய பிரபலங்கள் குறித்தும் காஸ்ட்யூம் டிஸைனரான நிரூபமா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த நேர்காணலில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தி போயட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜடா'. இப்படத்தை அறிமுக இயக்குனர் குமரன் இயக்கியுள்ளார்.

கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு காஸ்ட்யூம் டிஸைனராக பணியாற்றியவர் நிரூபமா.
இதேபோல் இயக்குனர் சுசீந்திரனின் ஏஞ்சலினா படத்திற்கும் காஸ்ட்யூம் டிஸைனராக பணியாற்றியுள்ளார். இப்படம் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இப்படங்களில் காஸ்ட்யூம் டிஸைனராக பணியாற்றியுள்ள அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தனது படங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுசீந்திரன் என்ற புகழந்த நிரூபமா, திறமைக்கு முக்கியத்துவம் அளிப்பவர் சுசீந்திரன் என்றார். அதோடு 2 படங்கள் பண்ணிய டைரக்டர்களே காஸ்ட்யூம் டிசைனரிடம் அத்தனை கேள்விகள் கேட்பார்கள் ஆனால் சுசீந்திரன் சார் திறமைக்குதான் முக்கியத்துவம் அளிப்பார் என்றார்.
தொடர்ந்து நடிகர் சரத்குமார் குறித்து பேசிய நிரூபமா, அவர் ஒரு சில் பர்சன் என்றார். சரத்குமாருக்கான ஆடைகள் மிகவும் பிடித்திருந்ததாகவும் அதற்காக தன்னை பாராட்டியதகாவும் கூறினார். மேலும் படக்குழுவுடன் சேர்ந்து போட்டோ எடுத்தபோது தன்னையும் அழைத்ததாகவும் அவர் கூறினார்.
இதேபோல் நடிகை ராதிகா சரத்குமாருடன் பணியாற்றியது குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். சரத்குமார் போலவே அவரும் எளிமையாக நடந்து கொண்டார் என்றும் தெரிவித்தார். ஜடா படம் குறித்தும் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் நிரூபமா. நிரூபமா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த நேர்க்காணல் வீடியோவாக உங்களுக்கு..


Click it and Unblock the Notifications











