twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜலக்கு ஜலக்கு சொடக்கு! அடுத்தடுத்து 3 படங்களில் நடித்தும், ஒரு படம் கூட வெளியே வராத நிலையில்4வதாக சொடக்கு மூலம் கலக்க வருகிறார் ஜெய்ஷா.3 படங்களில் நான் நடித்து வருகிறேன் என்று ஜெய்ஷா சொன்னபோது நம்மாமல்நமது கண்ணையே நம்ப முடியவில்லை. மெய்யாலுமா என்று ஜெய்ஷாவிடம்கேட்டபோது, ஆமாங்கண்ணா, இதுவரைக்கும் 3 படங்களில் நடித்து வருகிறேன்.இப்போது நாலாவது படமா சொடக்கு படத்தில் நடிக்கப் போகிறேன் என்றார்கொஞ்சலாக. சரி, இப்படி நடிச்சிக்கிட்டே இருக்கீங்களே, நீங்க நடிச்ச படங்கள்எப்போ வரும் பேபி என்றோம்.எல்லாப் படம் அடுத்தடுத்து வந்து அசத்தப்போகிறது. ஓஹோ எந்தன் பேபிபடம்தான் என்னோட முதல் படம். அப்ப நான் பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பரீட்சை எழுதி முடித்து விட்டிருந்த எனக்கு இந்த பட வாயப்புஎதிர்பாராமல் வந்தது.சரி என்று ஒத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். அப்புறம் அடுத்தடுத்து எனக்குபடங்கள் வரத் தொடங்கின. ஆகஸ்ட் 1 என்ற படம், கதையல்ல காவியம் என்ற படம்கிடைத்தது.இப்போது மூன்று படங்களிலும் நடித்து வருகிறேன். அடுத்து சொடக்கு வந்துள்ளது.இன்னும் ஒரு பெயரிடப்படாத படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன்.என்கிட்ட ஒரு நல்ல பழக்கம் இருக்குங்கண்ணா. அதாவது நடிக்க வந்து விட்டோம்.இப்படித்தான் நடிப்பேன், அப்படித்தான் நடிப்பேன் என்றெல்லாம் நான் கண்டிஷன்போட மாட்டேன்.எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், எதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறேன் என்றுசொடக்குப் போட்டு ஜெய்ஷா கூறியபோது கொஞ்சம் போல வெடவெடக்கத்தான்செஞ்சது சாமீ!நமது நடுக்கத்தைப் பார்த்தும் விடாத ஜெய்ஷா, என்கிட்ட எல்லாமே அம்சமாஇருக்கு. கூடவே திறமையும் இருக்கு. அப்புறம் என்ன வெளுத்து வாங்கவேண்டியதுதானே, கொஞ்சம் பொறுங்க, ஒவ்வொரு படமா வரட்டும், அப்புறம்தெரியும் ஜெய்ஷா யாருன்னு என்று படு தெனாவட்டாக வெட்டுகிறார் ஜெய்ஷா. பேரு ஜெய்ஷா என்று இருப்பதால் வடக்கத்தி வஞ்சிரம் மீன் என்று ஜெய்ஷாநினைத்து விடாதீர்கள். புள்ளைக்கு நம்ம சென்னைதான் பொறந்த ஊராம். நல்லா இரும்மா!

    By Staff
    |

    அடுத்தடுத்து 3 படங்களில் நடித்தும், ஒரு படம் கூட வெளியே வராத நிலையில்4வதாக சொடக்கு மூலம் கலக்க வருகிறார் ஜெய்ஷா.

    3 படங்களில் நான் நடித்து வருகிறேன் என்று ஜெய்ஷா சொன்னபோது நம்மாமல்நமது கண்ணையே நம்ப முடியவில்லை. மெய்யாலுமா என்று ஜெய்ஷாவிடம்கேட்டபோது, ஆமாங்கண்ணா, இதுவரைக்கும் 3 படங்களில் நடித்து வருகிறேன்.

    இப்போது நாலாவது படமா சொடக்கு படத்தில் நடிக்கப் போகிறேன் என்றார்கொஞ்சலாக. சரி, இப்படி நடிச்சிக்கிட்டே இருக்கீங்களே, நீங்க நடிச்ச படங்கள்எப்போ வரும் பேபி என்றோம்.

    எல்லாப் படம் அடுத்தடுத்து வந்து அசத்தப்போகிறது. ஓஹோ எந்தன் பேபிபடம்தான் என்னோட முதல் படம். அப்ப நான் பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பரீட்சை எழுதி முடித்து விட்டிருந்த எனக்கு இந்த பட வாயப்புஎதிர்பாராமல் வந்தது.

    சரி என்று ஒத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். அப்புறம் அடுத்தடுத்து எனக்குபடங்கள் வரத் தொடங்கின. ஆகஸ்ட் 1 என்ற படம், கதையல்ல காவியம் என்ற படம்கிடைத்தது.

    இப்போது மூன்று படங்களிலும் நடித்து வருகிறேன். அடுத்து சொடக்கு வந்துள்ளது.இன்னும் ஒரு பெயரிடப்படாத படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

    என்கிட்ட ஒரு நல்ல பழக்கம் இருக்குங்கண்ணா. அதாவது நடிக்க வந்து விட்டோம்.இப்படித்தான் நடிப்பேன், அப்படித்தான் நடிப்பேன் என்றெல்லாம் நான் கண்டிஷன்போட மாட்டேன்.

    எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், எதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறேன் என்றுசொடக்குப் போட்டு ஜெய்ஷா கூறியபோது கொஞ்சம் போல வெடவெடக்கத்தான்செஞ்சது சாமீ!

    நமது நடுக்கத்தைப் பார்த்தும் விடாத ஜெய்ஷா, என்கிட்ட எல்லாமே அம்சமாஇருக்கு. கூடவே திறமையும் இருக்கு. அப்புறம் என்ன வெளுத்து வாங்கவேண்டியதுதானே, கொஞ்சம் பொறுங்க, ஒவ்வொரு படமா வரட்டும், அப்புறம்தெரியும் ஜெய்ஷா யாருன்னு என்று படு தெனாவட்டாக வெட்டுகிறார் ஜெய்ஷா.

    பேரு ஜெய்ஷா என்று இருப்பதால் வடக்கத்தி வஞ்சிரம் மீன் என்று ஜெய்ஷாநினைத்து விடாதீர்கள். புள்ளைக்கு நம்ம சென்னைதான் பொறந்த ஊராம்.

    நல்லா இரும்மா!

      Read more about: jaisha in sodakku
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X