நயன்தாரா சொன்ன அந்த 3 குரங்கு.. அந்தணன் VS சேகுவேரா? இணையத்தில் கடும் மோதல்!
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், ஸ்ரீ கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல நடிகர்கள், நடிகைகளும் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சினிமாவில் போதை கலாச்சாரம் பெருகிவிட்டது கவலை அளிப்பதாக நடிகர் அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி இருந்தார். அப்போது, விஜய் அவர்களுக்கு சுகர் இருக்கிறது என்று பேசி இருந்தார்.
இது குறித்து, பத்திரிக்கையாளர் சேகுவேராவிடம் கேள்வி கேட்பது, அதற்கு பதில் அளித்த அவர், அந்தணன் மூத்த பத்திரிகையாளர் இல்லை, கிசுகிசு பத்திரிக்கையாளர் என்று வேண்டுமானால் சொல்லலாம். நயன்தாரா சொன்ன அந்த மூன்று குரங்குகளில் அந்தணனும் ஒருவர். அவர், நான் விஜய்க்கு சுகர் இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார். அவர், சொன்னால் அனைத்து விஷயங்களும் சரியாகத்தான் இருக்கும். ஏனென்றால், விஜய்க்கு அவர் நெருக்கமானவராக இருக்கிறார். விஜய் எந்த நடிகைக்கு வீடு வாங்கி கொடுத்தார் என்ற விஷயமும் தெரியும், அவருக்கு உடம்பில் என்ன மாதிரியான பிரச்சனை இருக்கிறது என்று தலையில் இருந்து கால் வரை விஜய்யின் அனைத்து பிரச்சனையும் தெரியும்.

சொம்பு தூக்கி: நடிகை த்ரிஷாவுக்கு வீடு வாங்கி கொடுத்தார் விஜய் என்று ஒருமுறை த்ரிஷா குறித்து இந்த பீலா பிஸ்மி, அந்தபுரம் அந்தணணும் பேசி இருந்தார்கள். ஆனால், இவர்கள் மீது த்ரிஷா வழக்கு போடாமல் மன்சூர் அலிகான் மீது வழக்கு போட்டார். விவேக் குடித்து இறந்தார், மயில்சாமி குடிக்கு அடிமையாக இருந்தார், கூல் சுரேஷ் குடிகாரன் என மற்றவர்களின் பெயரை தைரியமாக சொல்லும் அந்தணன், இப்போது த்ரிஷாவின் பெயரை சொல்வதே இல்லை, இதற்கு காரணம் தற்போது அவர் விஜய்க்கு சொம்பு தூக்கி வருகிறார்.
விஜய்க்கு குடிப்பழக்கம்: திருச்சி சூர்யா, விஜய்க்கு நான் நேரடியாக சவால் விடுத்தார், மாலை 6 மணிக்கே மேல் அவரை மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார். தினமும் கூட வேண்டாம். ஒரே ஒரு நாள் மட்டும் செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம். அவரால் அது முடியாது.. 6 மணிக்கு மேல் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியாது என்று தைரியமாக சொல்லி இருந்தார். இதற்கு அந்தணன் ஆதாரம் இருக்கா என்று கேட்டு இருக்கிறார். நீங்கள் அனைத்தையும் ஆதாரத்தோடுதான் பேசுகிறீர்களா.. அப்படி என்றால், விவேக், மயில்சாமி, கூல் கூரேஷ் பற்றி நீங்கள் சொன்ன கருத்துக்கு என்ன ஆதாரம்.
ஆதாரம் இருக்கா: சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் விஜய்க்கு அந்த பழக்கம் இருக்கிறது என்று, காசு வாங்கிவிட்டதால், எல்லாத்தையும் மூடி மறைக்கக்கூடாது. உங்களையே 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்ள முடியாது, உங்களுக்கே அந்த பழக்கம் இருக்கிறது. அது உங்களின் முகத்தை பார்த்தாலே நான்றாக தெரிகிறது. அப்படி இருக்கும் போது எதற்காக விஜய்க்கு குடிப்பழக்கம் இல்லை அவருக்கு சுகர் இருக்கிறது என்று சொல்லி ஏன் மூடி மறைத்து பேசுகிறீர்கள். அதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கா.. விஜய் விஷயத்தில் திருச்சி சூர்யா சொன்னது உண்மை தான் என Recent Voice யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











