செல்வராகவன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கிட்டார்.. இனி குடிச்சா கத முடிஞ்சது.. பிரபலம் பேட்டி!
சென்னை: இயக்குனர்,கதை ஆசிரியர், நடிகர் என பன்முகங்களை கொண்ட செல்வராகவன். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தத்துவங்களை பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது அவரின் மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராமில் இருந்து செல்வராகவனின் போட்டோக்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் பிரியப்போகிறார்களா என்ற கேள்வி காட்டுத்தீ போல இணயைத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.
அதில், செல்வராகன் 6 மாதத்திற்கு முன்பு செல்வராகவன் மிகவும் திறமையான நடிகர் அவ பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் தற்போது அவர் நடிப்பில் வெளியான ஆரியம் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் அவரின் தனிப்பட்ட சில பிரச்சனைகள் காரணமாகத்தான் அவருடைய கேரியரே வீணாகி கொண்டு இருக்கிறது. சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டு, அவருடன் மூன்று ஆண்டுகள் மட்டுமே இணைந்து வாழ்ந்தார் பின் அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதற்கு காரணம் அவருக்கு இருந்த போதை பழக்கம் தான். சோனியா அகர்வால் எவ்வளவோ சொல்லி சொல்லி பார்த்துவிட்டு, கடைசியில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அவரை பார்த்தால் அமைதியானவர் என்பது போலத்தான் தெரியும், ஆனால், அவருக்குள் ஒரு அந்நியன் இருக்கிறார்.

செல்வராகவன்: அப்போது செல்வராகவனுடன் உதவி இயக்குநராக பணியாற்ற கீதாஞ்சலி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் கீதாஞ்சலி பிடிவாதமாக திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கும் போது இனிமேல முடியவே முடியாது என்று அவரை விட்டு பிரிந்துவிட்டார். நல்ல வாழ்க்கையை அவரே தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டார். தனுஷ் , செல்வராகன் இரண்டு பேருமே சந்தோஷமா இல்லை. செல்வராகன் தனிமையில் இருப்பதை சொல்லிவிட்டார். ஆனால், தனுஷ் அதை சொல்லாமல் மனதிற்குள் வைத்துக்கொண்டு இருக்கிறார்.
இனி குடிச்சா கத முடிஞ்சது: செல்வராகவனுக்கு ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்து இருக்கிறார். இனிமேல் குடிச்சா கத முடிஞ்சது, ஆனாலும் அவர் சொல்வதை கேட்காததால், மனவேதனையில் இருக்கும் கீதாஞ்சலி, இதற்கு மேல் முடியாது என்று செல்வராகனின் போட்டோக்கள் அனைத்தையும் டெலிட் செய்துவிட்டார். இதற்கு மேலும் செல்வராகன் திருந்தவில்லை என்றால், தனுஷ் போல இவருக்கும் விரைவில் விவாகரத்து நடக்கும் என்று பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் அந்த பேட்டியில் பேசி என்றார்.


Click it and Unblock the Notifications











