Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
காடன் திரைப்படம் ஒரு நிஜக் கதை.. யானைகளுக்காக போராடிய ரியல் ஹீரோவின் வாழ்க்கை.. பிரபுசாலமன் பேட்டி!
சென்னை: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால், ஷ்ரியா பில்கோன்கர், ஜோயா ஹுசைன் மற்றும் 18 யானைகள் இணைந்து நடித்த காடன் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.
காடன் திரைப்படத்தின் வெளியீட்டு பிசியில் இருக்கும் இயக்குநர் பிரபு சாலமன் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.
கும்கி படத்தை தொடர்ந்து மீண்டும் யானைகளை மையமாக வைத்து ஏன் படம் எடுத்தீங்க என்கிற கேள்விக்கு, கும்கி ஒரு காதல் திரைப்படம், அதில் யானை ஒன்று இடம்பெற்றது. ஆனால், காடன் முழுக்க முழுக்க யானைகள் பற்றிய படம் தான்.
நிஜக் கதை
காசிரங்கா எனும் இடத்தில் காட்டிற்கு நடுவே டவுன்ஷிப் கட்டப்படுவதற்காக கார்ப்பரேட் நிறுவனத்தால் எழுப்பப்பட்ட மிகப்பெரிய சுவரால் ஏகப்பட்ட யானைகள் தவித்து வந்ததை அறிந்த ஒரு சாதாரண சமூக ஆர்வலர் 2007 முதல் 2017 வரை சுமார் 10 ஆண்டுகளாக போராடி அந்த சுவரை உடைக்க சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற நிஜக் கதை தான் காடன்.
பல இடங்களில் படப்பிடிப்பு
அதற்காகத் தான் இத்தனை போராட்டங்கள், இத்தனை இடங்களில் படப்பிடிப்பு என நாங்களும் போராடி அந்த ஆழமான கதைக்கு உயிர் கொடுக்க முய்ற்சித்துள்ளோம் என இயக்குநர் பிரபு சாலமன் பேசியுள்ளது கூஸ் பம்ப்ஸை கொடுக்கிறது.
இமானுக்கு தேசிய விருது
இசையமைப்பாளர் இமான் மற்றும் ரசுல் பூக்குட்டிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறித்து பேசிய அவர், கும்கி படத்திற்கே இமானுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக தற்போது கிடைத்துள்ளது என்றார்.
ராணாவுக்கு கிடைக்கும்
மேலும், காடன் படத்திற்காக ரசுல் பூக்குட்டிக்கு அடுத்த ஆண்டு தேசிய விருது கிடைக்கும் என நினைக்கிறேன் என்றார். அதே போல, இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து, 18 யானைகளுடன் கடும் உழைப்பை போட்டு நடித்த நடிகர் ராணாவுக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் கூறியுள்ள அவரது பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க.. காடன் திரைப்படத்தை தியேட்டர்களில் கண்டு ரசியுங்கள்!