Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நயன்தாராலாம் அந்த விஷயத்துல சான்ஸே இல்லை.. சினிமாவில் காட்டப்படும் விதம்.. கல்கி பேட்டி!
சென்னை: இந்த லாக்டவுனில் திருநங்கைகள் படும்பாடு குறித்து பொள்ளாச்சி கல்கி அளித்துள்ள பேட்டி, ஒன் இந்தியா தமிழ் யூடியூப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாக்களில் திருநங்கைகளை முன்பு கொச்சைப் படுத்தி எடுத்த நிலையில், இப்போ ரொம்பவே மாறி இருக்காங்க முதல், நடிகை நயன்தாரா திருநங்கைகள் மேல் செலுத்தும் அன்பு வரை பல விஷயங்களில் இந்த வி கனெக்ட் சாட்டில் அழகாக பேசியுள்ளார் கல்கி.
உலக நாடுகளில் திருநங்கைகளுக்கு வழங்கப்படுவதை போல் மருத்துவ காப்பீடுகள் இந்தியாவிலும் அதிக அளவில் வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களை யாரும் கடவுளாக பார்க்க வேண்டாம், சாதாரண மனிதர்களாக பார்த்தாலே போதும் என வெகு இயல்பாக பேசியுள்ளார்.
நர்த்தகி படத்தில் நடித்துள்ள கல்கி, சினிமாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சுஹாசினி மேடம் உள்ளிட்டவர்கள் தனது நலனில் மிகவும் அக்கறை செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
சர்கார், தர்பார் உள்ளிட்ட படங்களில் திருநங்கைகளை நல்ல விதத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கையாண்டது குறித்தும் இந்த பேட்டியில் பேசியுள்ளார்.
நாக சைதன்யாவின் 'லவ் ஸ்டோரி'க்கு நடனம் அமைக்கிறாரா 'ரவுடி பேபி' சாய் பல்லவி? பரபரப்பில் டோலிவுட்!
போதுமான கல்வி அறிவு இல்லாததன் காரணமாகவே திருநங்கைகள் பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில்களுக்கு செல்வதையும் செய்து வருகின்றனர் என்றும், பள்ளிகளிலேயே அவர்கள் படிப்பதற்கான இயல்பான சூழல் உருவானால், ஏகப்பட்ட திருநங்கைகள் சாதனையாளர்களாக இந்த சமூகத்தில் எழுச்சி பெறுவர் என்றும் கூறினார்.
நயன்தாராவை தான் இதுவரை சந்தித்தது இல்லை என்றாலும், திருநங்கைகள் மீது அவர் காட்டும் அன்பு குறித்து தனது சகோதரிகள் பலர் தெரிவித்துள்ளதாகவும், அவர்களை கண்டால், கட்டியணைத்து அன்புடன் பேசும் குணம் கொண்டவர் என்றும் பாராட்டியுள்ளார்.
அதே போலத்தான் நடிகர் விஜய் செதுபதியும் திருநங்கைகள் மீது, அக்கறை கொண்ட நடிகராக திகழ்கிறர். அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் எங்களுக்கு உடன் பாடு இல்லை என்றாலும், அதற்கான கோபத்தை இயக்குநரிடம் தான் காட்டுவோமே தவிர அந்த நடிகரிடம் காட்டத் தேவையில்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொள்ளாச்சி கல்கியின் முழு வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யுங்க!