லிங்காவுக்கு விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டது தவறு! - கமல் ஹாஸன்
லிங்கா படத்துக்கு விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டது தவறு என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார்.
தனது அடுத்த படமான உத்தம வில்லன் குறித்து முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கமல்.
அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, கமலிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.
திரைப்படங்களுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன.. சமீபத்தில் நடந்தது (லிங்கா) உங்களுக்கே தெரியும்.. என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், "சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம். வினியோகஸ்தர்களுக்கு கலை. வியாபாரம் முடிந்தபிறகு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது தவறு.
ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்து படம் பிடிக்கவில்லை. பாதிப் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானது அல்ல. பாதி பணத்தை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தாருங்கள் என்று ரசிகர்கள் கேட்டால் நன்றாக இருக்குமா? அதுபோல்தான் விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பிக் கேட்பதும்," என்றார்.


Click it and Unblock the Notifications











