ஏங்கும் கமலினி! கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிப்பில் விளையாடியிருக்கும்வங்கத்து மங்கை கமலினி முகர்ஜி, கிளாமராக நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.ஆனால் இவரது குடும்ப குத்துவிளக்கு தோற்றத்தைப் பார்த்துவிட்டுஇயக்குனர்கள்தான் அந்த மாதிரி கேரக்டரகளைத் தர மாட்டேன் என்கிறார்களாம். இதனால் ரொம்ப விசனத்தில் இருக்கிறார் கமலினி.ஆரம்பத்தில் விளம்பரங்களில் கலக்கியவர் கமலினி. அப்படியே ஆந்திராவில் வந்துவேட்டையாடிக் கொண்டிருந்தவரை வேட்டையாடு விளையாடு படம் மூலம்தமிழுக்குக் கொண்டு வந்தார் கமல்.இந்தப் படம் தவிர கமலினிக்கு வேறு புதிய படம் ஏதும் இதுவரை புக் ஆகவில்வை.அச்சச்சோ, என்னாச்சோ என்று கமலினியைப் பிடித்து விசாரித்தோம்.நடிக்க மாட்டேன் என்றெல்லாம இல்லை. கொஞ்சமாக ஒரு கேப் விட்டுள்ளேன்.இப்போது மீண்டும் விளம்பரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.அதுக்காகத்தான் சினிமாவுக்கு சின்னதாக டாட்டா காட்டியுள்ளேன் என்று விளக்கினார்.குடும்பப் பாங்காகத்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போடுறீங்களாமே என்றுரொம்பமுக்கியமான கேள்வியை கேட்டபோது,யார் சொன்னது. நான் அப்படியெல்லாம் சொன்னதே இல்லை. கிளாமராகவும் நடிக்கநான் தயாராகத்தான் இறுக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட ரோல்கள் இன்னும்என்னைத் தேடி வரவில்லை. எனக்கு அப்படி ரோல்கள் கிடைக்காதது வருத்தமாஇருக்கு. வந்தால் நிச்சயம் துணிச்சலாக நடிப்பேன் என்று வயிற்றில் பீர் வார்த்தார்.கமலினி தமிழில் கமலுடன் நடித்த கையோடு தெலுங்கில் கோதாவரி என்ற படத்திலும்நடித்தார். அது படுபிக்கப் ஆகி பெரும் ஹிட் ஆகி விட்டதாம்.கமல் என்று கேள்வியை ஆரம்பிக்குபோதோ.. கமலினி முகத்தில் கிலோ கணக்கில்ரசகுல்லா பெருமை.கமல் சாருடன் நடித்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதில் சின்ன ரோல்தான்.இருந்தாலும் எனது நடிப்பு ரசிகர்களை கவர்ந்துவிட்டது. ஏகப்பட்ட பாராட்டுக்கள்.ஸோ, தமிழிலும் தொடர்ந்து நடிக்க ஆசையா இருக்கேன் என்கிறார் கமலினி.யூஸ் பண்ணிக்கங்கப்பா!
கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிப்பில் விளையாடியிருக்கும்வங்கத்து மங்கை கமலினி முகர்ஜி, கிளாமராக நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.ஆனால் இவரது குடும்ப குத்துவிளக்கு தோற்றத்தைப் பார்த்துவிட்டுஇயக்குனர்கள்தான் அந்த மாதிரி கேரக்டரகளைத் தர மாட்டேன் என்கிறார்களாம்.
இதனால் ரொம்ப விசனத்தில் இருக்கிறார் கமலினி.ஆரம்பத்தில் விளம்பரங்களில் கலக்கியவர் கமலினி. அப்படியே ஆந்திராவில் வந்துவேட்டையாடிக் கொண்டிருந்தவரை வேட்டையாடு விளையாடு படம் மூலம்தமிழுக்குக் கொண்டு வந்தார் கமல்.
இந்தப் படம் தவிர கமலினிக்கு வேறு புதிய படம் ஏதும் இதுவரை புக் ஆகவில்வை.அச்சச்சோ, என்னாச்சோ என்று கமலினியைப் பிடித்து விசாரித்தோம்.
நடிக்க மாட்டேன் என்றெல்லாம இல்லை. கொஞ்சமாக ஒரு கேப் விட்டுள்ளேன்.இப்போது மீண்டும் விளம்பரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.அதுக்காகத்தான் சினிமாவுக்கு சின்னதாக டாட்டா காட்டியுள்ளேன் என்று விளக்கினார்.
குடும்பப் பாங்காகத்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போடுறீங்களாமே என்றுரொம்பமுக்கியமான கேள்வியை கேட்டபோது,யார் சொன்னது. நான் அப்படியெல்லாம் சொன்னதே இல்லை. கிளாமராகவும் நடிக்கநான் தயாராகத்தான் இறுக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட ரோல்கள் இன்னும்என்னைத் தேடி வரவில்லை. எனக்கு அப்படி ரோல்கள் கிடைக்காதது வருத்தமாஇருக்கு. வந்தால் நிச்சயம் துணிச்சலாக நடிப்பேன் என்று வயிற்றில் பீர் வார்த்தார்.
கமலினி தமிழில் கமலுடன் நடித்த கையோடு தெலுங்கில் கோதாவரி என்ற படத்திலும்நடித்தார். அது படுபிக்கப் ஆகி பெரும் ஹிட் ஆகி விட்டதாம்.
கமல் என்று கேள்வியை ஆரம்பிக்குபோதோ.. கமலினி முகத்தில் கிலோ கணக்கில்ரசகுல்லா பெருமை.
கமல் சாருடன் நடித்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதில் சின்ன ரோல்தான்.இருந்தாலும் எனது நடிப்பு ரசிகர்களை கவர்ந்துவிட்டது. ஏகப்பட்ட பாராட்டுக்கள்.ஸோ, தமிழிலும் தொடர்ந்து நடிக்க ஆசையா இருக்கேன் என்கிறார் கமலினி.
யூஸ் பண்ணிக்கங்கப்பா!


Click it and Unblock the Notifications











