Don't Miss!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டாக்குமென்ட்ரி மாதிரி இருக்குன்னு சொன்னாங்க.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் பேட்டி!
சென்னை: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், துல்கர் சல்மான், ரித்து வர்மா நடிப்பில் உருவாகி உள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி திரைக்கு வருகிறது.
Recommended Video
வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் குறித்தும், சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக பட்ட கஷ்டங்கள் குறித்தும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகனும் மலையாள நடிகருமான துல்கர் சல்மான், இந்த கதையை கேட்ட உடனே, பிடித்துப் போய், ஓகே சொல்லிவிட்டாராம்.
ஆனால், இந்த கதைக்கு, முன்னதாக தேசிங்கு பெரியசாமி, வேறு ஒரு டிராவல் கதையை படமாக்க வேண்டும் என்றும் முயற்சித்து வந்துள்ளார். ஆனால், அந்த படத்தின் கதையை யாரிடம் கூறினாலும், அது வெறும் டாக்குமென்டரி படம் போலத்தான் இருக்கிறது. கமர்ஷியலா ஒர்க்கவுட் ஆகாது என்றே தெரிவித்திருக்கிறார்கள்.
தனது கதையின் மீது கொண்ட நம்பிக்கையை விட்டு விடாமல், அந்த கதைக்காக, 4 வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு டிரைலரையும் உருவாக்கிய தேசிங்கு பெரியசாமி, அதனை விஜய் மில்டனிடம் காண்பித்துள்ளார்.
அந்த ட்ரைலரை பார்த்த மில்டன், கதை எல்லாம் நல்லாத் தான் இருக்கு; ஆனால் டாக்குமென்ட்ரி படம் கேட்டகரியில் தான் ரசிகர்கள் இதனை பார்ப்பார்கள், முதல் படம், பட்டி தொட்ட்டி என அனைவரையும் கவரும் படியாக எடுக்க வேண்டும் என அறிவுரை கூறவே, கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தை உருவாக்கியதாக இயக்குநர் பேட்டி அளித்துள்ளார்.
மேலும், தனது திரை வாழ்க்கை மற்றும் இயக்குநராக பட்ட கஷ்டங்கள், சுவாரஸ்ய அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துள்ளார். இந்த வாரம் வெளியாகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை தியேட்டரில் பாருங்க.. இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் பேட்டியை வீடியோவை க்ளிக் செய்து பாருங்க..