Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் அவ்ளோ பெரிய வில்லிலாம் இல்லீங்க.. கவண் படத்தில் மிரட்டிய நடிகை பிரியதர்ஷனியின் பேட்டி!
சென்னை: அச்சம் என்பது மடமையடா, கவண் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரியதர்ஷனியின் பிரத்யேக பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
ஆர்ட் டைரக்டர் கிரண் மூலமாகத் தான் தனக்கு கவண் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கூறும் நடிகை பிரியதர்ஷனி, கவண் படத்தில் அந்த சிறுவனை அறையும் காட்சிக்காகத் தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே தான் ரொம்ப சாஃப்ட் கேரக்டர் என்றும் அந்த படத்தில், வில்லி கேரக்டர் என கே.வி. ஆனந்த் கூறும்போது, ஆரம்பத்தில் நடிக்கத் தயங்கினேன். ஆனால், இது போன்றவர்கள் சமூகத்தில் உலாவி வருகின்றனர் அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என எந்த டிவி சேனல் என்று சொல்லாமல், கே.வி. ஆனந்த் கூறும்போது, அவரது உணர்வை புரிந்து கொண்டு இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன் எனக் கூறியுள்ளார்.
தொழில், நடிப்பு மற்றும் சமூக சேவை என பல துறைகளில் கலக்கி வரும் பிரியதர்ஷனி, இந்த கொரோனா காலத்தில், தனது சரஸ்வதி அறக்கட்டளை மூலமாக பல ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு என ரேஷன் பொருட்களை இலவசமாகவும் வழங்கி உள்ளார்.
நான் வில்லன்.. கார்த்தி ஹீரோ.. லிங்குசாமிக்கு அதிரடி பதில் கொடுத்த சூர்யா!
பாடகி உஷா உத்தப் போல மிகப்பெரிய பொட்டும், ஆடை அலங்காரமும் செய்து கொண்டு, பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும் இவர், அழகான ஆங்கில பாடலையும் பாடி அசத்தி உள்ளார் இந்த பேட்டியில்..
ஆஸ்திரேலியாவில் திருமணமாகி செட்டிலான அவர், முதல் திருமணம் நீடிக்காத நிலையில், மறுமணம் செய்து கொண்டு, வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும் கூறியுள்ளதை இந்த பேட்டியில் கண்டு மகிழுங்கள்!