Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'உயிரெழுத்து' படத்தில் நான் ஹீரோ இல்லை!- அறிக்கை விட்ட ராகவா லாரன்ஸ்
இந்தப் படம் பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டதாகவும், அதில் ஹீரோவின் தோழனாக மட்டுமே தான் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் இயக்குனர்களில் ஆர்.சுந்தரராஜன் அவர்களும் ஒருவர்.
அவரது இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு 'உயிரெழுத்து' படத்தில் நடித்தேன். நான் ஏற்கெனவே நடித்த அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், அற்புதம் போன்ற படங்களைப் போன்றுதான் இந்த படத்திலும் ஹீரோவின் நண்பனாக ஒரு சில காட்சிகளிலும், ஒரே ஒரு பாடல் காட்சியிலும் நடித்திருந்தேன். நான் அதில் ஹீரோ இல்லை.
ஆனால் சமீபத்தில் உயிரெழுத்து படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்களில் நான்தான் ஹீரோ என்பது போன்று பிரதானப்படுத்தப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னை சந்திக்கிற நண்பர்களும் இப்படத்தில் எப்பொழுது நடித்தீர்கள் என்று கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே, இனி 'உயிரெழுத்து' விளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.