Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனி கொடைக்கானலில் கோல்ப் விளையாடி காலத்தைக் கழிக்க ஆசை! - மணிரத்னம்
இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி:
ராவணன் படத்தை ஆரம்பிக்கும் போதே, இதுதான் எனது கடைசி படம் என முடிவு செய்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி, கொடைக்கானலில் செட்டிலாகும் எண்ணம் இருக்கிறது. அங்கே தினமும் கோல்ப் விளையாட ஆசை எனக்கு.
இப்போது அடுத்த படம் என்ன என்ன என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். எனக்கும் இன்னுமொரு படம் மட்டும் பண்ணலாம் என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம். ஆனால் அடுத்த படத்துக்கான ஐடியா எதுவும் என்னிடம் இல்லை.
ராவணன் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் அது படத்தைப் பாதிக்காது என்றுதான் நம்புகிறேன்" என்றார்.
இன்று ரிலீஸ்...
இதற்கிடையே ராவணன் படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகிறது. தமிழகத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ் ராவணன் வெளியாகிறது. இந்தி ராவண், தெலுங்கு வில்லன் படத்தையும் சேர்த்து 1300 தியேட்டர்களில் வெளியாகிறது.
முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவு திருப்தியாக உள்ளதென பிக் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமைக்குப் பிறகு படம் தாக்குப் பிடிப்பது ரசிகர்கள் கையில் உள்ளது.