Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லவ் ஃபெயிலியர் ஆனவங்க என்ன பண்ணனும்? நடிகை மஞ்சிமா மோகனின் சூப்பர் அட்வைஸ் இதோ!
சென்னை: எனோ வானிலை மாறுதேன்னு சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.
தொடர்ந்து பல படங்களில் க்யூட்டாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை அடித்து வருகிறார்.
காதலர் தினத்தை முன்னிட்டு ஒன் இந்தியா தமிழ் பிலிம் பீட்டுக்கு அவர் கொடுத்துள்ள ஸ்பெஷல் பேட்டி வைரலாகி வருகிறது.
காதலர் தினத்தில் நம்பிக்கையில்லை
காதலர் தினம், அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என இது போன்ற தினங்களில் தனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை என வெளிப்படையாக கூறியுள்ளார். எல்லா நாளும் காதலிப்பவர்களுக்கு காதலர் தினம் தானே என்கிற அடடே தத்துவத்தையும் அழகாக கூறியுள்ளார்.
லவ் ஃபெயிலியரானால்
காதலில் தோல்வியுற்றால் வாழ்க்கையே போயிடுச்சுன்னு நினைக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விருப்பப் படுறீங்க என்ற கேள்விக்கு, அட்வைஸ் கொடுப்பது எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி என்கிற தொனியில் பேசிய மஞ்சிமா, நிறைய பேர் இருக்காங்க, இவங்க இல்லைன்னா இன்னொருத்தர் கண்டிப்பா கிடைப்பாங்க, வாழ்க்கை எப்படியும் ஹேப்பியா இருக்கும் என கூலாக கூறுகிறார்.
அதுக்கு சான்ஸே இல்லை
நீங்க உங்களோட காதல் அனுபவத்தை சொல்லுங்க என கேட்டதற்கு அதுக்கு சான்ஸே இல்லை என சிரிக்கிறார். ஸ்கூல் டைம்ல பப்பி லவ்வாவது இருந்ததா? என்ற கேள்விக்கு அப்பா, அம்மா கிட்ட எதையுமே மறைக்க முடியாதுங்க என பரிதாபமாக பேசுவது செம க்யூட்.
யாருமே புரபோஸ் பண்ணல
சமீபத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் 90வது படமாக வெளியான களத்தில் சந்திப்போம் படத்தில் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்திருந்தார் மஞ்சிமா மோகன். இவ்ளோ பப்ளியா இருக்க உங்களுக்கு ஏகப்பட்ட லவ் புரபோஸ் வந்திருக்குமே என்று கேட்டதற்கும், இதுவரை யாருமே புரபோஸ் பண்ணல என்றும் ஏக்கமாக மஞ்சிமா கூறும் செம கலாட்டாவான காதலர் தின ஸ்பெஷல் பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!